புதுடில்லி: எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகியோருக்கு இன்று நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக பாரத ரத்னா விருது கருதப்படுகிறது. மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கான இந்த விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகிய 5 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு இந்த விருது இந்தாண்டு தான் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பி.பி பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார். சரண் சிங் சார்பில், அவரது பேரன் ஜெயந்த் செளத்ரி, குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம். எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஆண்டு காலமான நிலையில் அவரது மகள் நித்யா ராவ் விருதினை பெற்றுக்கொண்டார்.
மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமான கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த நடைபெற்ற விழாவில் அவரது மகன் ராம்நாத் தாகூர் பெற்றுக் கொண்டார்.வயது மூப்பு காரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானி ஜனாதிபதி மாளிகைக்கு வர முடியாததினால், அவருக்கு இந்த விருது அவரது வீட்டில் சென்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}