ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

Mar 30, 2024,01:38 PM IST

புதுடில்லி:  எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகியோருக்கு இன்று நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.


இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக பாரத ரத்னா விருது கருதப்படுகிறது. மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.  இந்தாண்டிற்கான இந்த விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகிய 5 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு இந்த விருது இந்தாண்டு தான் வழங்கப்பட்டுள்ளது.




சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பி.பி பிரபாகர்  ராவ் பெற்றுக் கொண்டார். சரண் சிங் சார்பில்,  அவரது பேரன் ஜெயந்த் செளத்ரி, குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம். எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஆண்டு காலமான நிலையில் அவரது மகள் நித்யா ராவ் விருதினை பெற்றுக்கொண்டார். 


மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச  தலைவருமான  கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த நடைபெற்ற விழாவில் அவரது மகன் ராம்நாத் தாகூர் பெற்றுக் கொண்டார்.வயது மூப்பு காரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானி ஜனாதிபதி மாளிகைக்கு வர முடியாததினால், அவருக்கு இந்த விருது அவரது வீட்டில் சென்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், குடியரசுத்  துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்