மறைந்தார் எழுத்தாளர் நாறும்பூ நாதன்.. பெரும் சோகத்தில் புத்தகப் பிரியர்கள்!

Mar 16, 2025,11:16 AM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவராக திகழ்ந்து வந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்.


சிறந்த எழுத்தாளரும், நெல்லை மாவட்டத்தில் பல வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக  திகழ்ந்தவருமான நாறும்பூநாதனின் மறைவு வாசிப்புப் பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் நாறும்பூநாதன். 




தமிழ்நாடு அரசின் உ.வே.சா.விருது உள்ளிட்ட பல விருதுகலளைப் பெற்றவரான நாறும்பூநாதன், நெல்லையில் வருடா வருடம் நடைபெறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வந்த பெருமைக்குரியவர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பிறந்தவர் நாறும்பூநாதன். நெல்லை மண் சார்ந்த எழுத்துக்களால் மிகப் பிரபலமானார். அவரது படைப்புகள் அனைத்துமே நெல்லை மண்ணின் மாண்பையும், பெருமைகளையும், வாழ்க்கையையும் சித்தரிப்பதாகவே இருக்கும். இவரது தந்தை தமிழாசிரியர். எனவே இயல்பாகவே நாறும்பூநாதனுக்கும் தமிழ் மீதும் இலக்கியம் மீதும் காதல் ஏற்பட்டு விட்டது. பல இலக்கிய சஞ்சிகைகளில் இவரது எழுத்துக்கள் தவறாமல் இடம் பெற்றுள்ளன. 


திருநெல்வேலி: நீர் - நிலம் - மனிதர்கள் என்ற நூல் மிகப் பிரபலமானது. நெல்லை மண்ணின் மைந்தர்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார். பல கட்டுரைகளை வடித்துள்ளார்.  நிஜ நாடக இயக்கத்திலும் தீவிரமாக செயல்பட்டவர் நாறும்பூநாதன். த்வனி என்ற இதழை நடத்தியுள்ளார். புதுவிசை ஆசிரியர் குழுவிலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல், வாழ்க்கை வரலாற்று நூல், நேர்காணல்கள் உள்ளிட்டவற்றை படைத்துள்ளார் நாறும்பூநாதன். எழுத்துலகிற்கும், வாசிப்பு பிரியர்களுக்கும் நாறும்பூநாதனின் மறைவு பேரிழப்பு.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்