திருநெல்வேலி: திருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவராக திகழ்ந்து வந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்.
சிறந்த எழுத்தாளரும், நெல்லை மாவட்டத்தில் பல வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக திகழ்ந்தவருமான நாறும்பூநாதனின் மறைவு வாசிப்புப் பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் நாறும்பூநாதன்.

தமிழ்நாடு அரசின் உ.வே.சா.விருது உள்ளிட்ட பல விருதுகலளைப் பெற்றவரான நாறும்பூநாதன், நெல்லையில் வருடா வருடம் நடைபெறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வந்த பெருமைக்குரியவர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பிறந்தவர் நாறும்பூநாதன். நெல்லை மண் சார்ந்த எழுத்துக்களால் மிகப் பிரபலமானார். அவரது படைப்புகள் அனைத்துமே நெல்லை மண்ணின் மாண்பையும், பெருமைகளையும், வாழ்க்கையையும் சித்தரிப்பதாகவே இருக்கும். இவரது தந்தை தமிழாசிரியர். எனவே இயல்பாகவே நாறும்பூநாதனுக்கும் தமிழ் மீதும் இலக்கியம் மீதும் காதல் ஏற்பட்டு விட்டது. பல இலக்கிய சஞ்சிகைகளில் இவரது எழுத்துக்கள் தவறாமல் இடம் பெற்றுள்ளன.
திருநெல்வேலி: நீர் - நிலம் - மனிதர்கள் என்ற நூல் மிகப் பிரபலமானது. நெல்லை மண்ணின் மைந்தர்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார். பல கட்டுரைகளை வடித்துள்ளார். நிஜ நாடக இயக்கத்திலும் தீவிரமாக செயல்பட்டவர் நாறும்பூநாதன். த்வனி என்ற இதழை நடத்தியுள்ளார். புதுவிசை ஆசிரியர் குழுவிலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல், வாழ்க்கை வரலாற்று நூல், நேர்காணல்கள் உள்ளிட்டவற்றை படைத்துள்ளார் நாறும்பூநாதன். எழுத்துலகிற்கும், வாசிப்பு பிரியர்களுக்கும் நாறும்பூநாதனின் மறைவு பேரிழப்பு.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}