மறைந்தார் எழுத்தாளர் நாறும்பூ நாதன்.. பெரும் சோகத்தில் புத்தகப் பிரியர்கள்!

Mar 16, 2025,11:16 AM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவராக திகழ்ந்து வந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்.


சிறந்த எழுத்தாளரும், நெல்லை மாவட்டத்தில் பல வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக  திகழ்ந்தவருமான நாறும்பூநாதனின் மறைவு வாசிப்புப் பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் நாறும்பூநாதன். 




தமிழ்நாடு அரசின் உ.வே.சா.விருது உள்ளிட்ட பல விருதுகலளைப் பெற்றவரான நாறும்பூநாதன், நெல்லையில் வருடா வருடம் நடைபெறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வந்த பெருமைக்குரியவர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பிறந்தவர் நாறும்பூநாதன். நெல்லை மண் சார்ந்த எழுத்துக்களால் மிகப் பிரபலமானார். அவரது படைப்புகள் அனைத்துமே நெல்லை மண்ணின் மாண்பையும், பெருமைகளையும், வாழ்க்கையையும் சித்தரிப்பதாகவே இருக்கும். இவரது தந்தை தமிழாசிரியர். எனவே இயல்பாகவே நாறும்பூநாதனுக்கும் தமிழ் மீதும் இலக்கியம் மீதும் காதல் ஏற்பட்டு விட்டது. பல இலக்கிய சஞ்சிகைகளில் இவரது எழுத்துக்கள் தவறாமல் இடம் பெற்றுள்ளன. 


திருநெல்வேலி: நீர் - நிலம் - மனிதர்கள் என்ற நூல் மிகப் பிரபலமானது. நெல்லை மண்ணின் மைந்தர்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார். பல கட்டுரைகளை வடித்துள்ளார்.  நிஜ நாடக இயக்கத்திலும் தீவிரமாக செயல்பட்டவர் நாறும்பூநாதன். த்வனி என்ற இதழை நடத்தியுள்ளார். புதுவிசை ஆசிரியர் குழுவிலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல், வாழ்க்கை வரலாற்று நூல், நேர்காணல்கள் உள்ளிட்டவற்றை படைத்துள்ளார் நாறும்பூநாதன். எழுத்துலகிற்கும், வாசிப்பு பிரியர்களுக்கும் நாறும்பூநாதனின் மறைவு பேரிழப்பு.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வலுவாக உள்ளது.. திருமாவளவன் திட்டவட்டம்

news

திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த ஆர்டிஓ தேவசேனா.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

news

திமுகவின் கண்ணுக்குட்டி மட்டுமல்ல.. கண்ணுக்குட்டியின் எஜமானர்களும் சிக்குவர்: எடப்பாடி பழனிச்சாமி

news

அகமதாபாத் விமான விபத்து... ஏர் இந்தியா கருப்புப் பெட்டி கடும் சேதம்!

news

கமல் படத்தைத் தடுக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?.. கன்னட அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

news

கொமேனியைத் தெரியுமா.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள நெருக்கமான லிங்க்!

news

குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும்... தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்!

news

நம் சமையலறையில்.. ஏலக்காய்க்கு முக்கியத்துவம் ஏன் தெரியுமா.. இதாங்க காரணம்!

news

மீண்டும் தொடர் உயர்வில் தங்கம்... இன்றைக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்