மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!

Sep 09, 2026,02:50 PM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


வனத்திலே தான் மானு 

மரத்திலே தான் தேனு

வாடி புள்ளே பானு 

அழைக்கிறேன் நானு


தேனை எடுத்து 

குடிக்கத் தாரேன்

மானைப் புடுச்சு 

வளர்க்கப் போறேன்


மாமன் கூட 

நடந்து பாரு

மகிழ்வுடனே தொடர்ந்து 

பாரு




ஆத்து நீரை 

குடிச்சு பாரு

அள்ளிப் பருகி 

தாகம் தீரு


ஆலமரம் நெழலில் 

கொஞ்சம்

அமர்ந்து நீயும் 

இருந்து பாரு


பறவை இடும் 

சத்தம் கேளு

பாவை நீயும் 

நித்தம் கேளு


வெயிலின் வெப்பம் 

தணியும் பாரு

மயிலக் கொஞ்சம் 

பக்கம் பாரு


தூக்கம் வந்து 

சொக்கும் பாரு

துணியை விரிச்சு 

படுத்துப் பாரு


இயற்கை அன்னை 

தாலாட்டு

இனிமை தரும் 

சீராட்டு


மாமன் கூட 

வீடு வந்து

மனம் மகிழ்ந்து 

பாராட்டு


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

news

மகளே நிறைவேற்றுவாயா?

news

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"

news

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த மாஸான கோவில்.. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில்!

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்