- கவிஞர் பி.எஸ். முருகேசன்
வயலு வரப்புல தான்
வண்ண மயில் நான் நடக்க
புயலும் மழை அடிக்க
புடவையும் மழை நனைக்க
நானும் குடை பிடிச்சு
நடக்கிறேன் தான் நனஞ்சு
தரையும் வழுக்குதே
தடுமாற்றம் மாகுதே
மழைநீர் வெள்ளம் வந்து
வயலையும் தான் மூழ்கடிக்க
மனமும் படபடக்க
மழைநீரை நா கடக்க

வீடு வந்து
சேர்வதற்கு
வெகு சிரமம் ஆயிருச்சு
தலை துவட்டி
துணி மாத்தி
தரமான பால் வாங்கி
சூடான காஃபி போட்டு
சுக்கையும் தட்டிப் போட்டு
மாமனுக்கு தந்து
மரியாதை செய்யனுமே
சாமிக்கு விளக்கேற்றி
குங்குமம் பொட்டு வச்சு
குல சாமி கோவிலுக்கு
கூட்டிக்கிட்டு போகணும்
பிள்ளைங்க குட்டியோட
பெருமையுடன் வாழணும்!
வானம் நீர்நிலை ஆகிறது.. நீரில் ஒளியோன் காணும் கொக்குகள்!
விரைந்திங்கு வாருமம்மா வேண்டும் வரம் தாருமம்மா!
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
வயலு வரப்புல தான் வண்ண மயில் நான் நடக்க!
இமைப் பொழுதும் நமைப் பிரியா ஆண்டவனுக்கு நன்றி !
சிந்தனைச் சிதறல்.. பள்ளம் இல்லா மேடுகள் இல்லை.. தடைகள் இல்லா சாதனைகளும் இல்லை!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
ஆடியில் ஆடி வரும் மெல்லிடையாள்.. தேன் தமிழ் மொழியாள் !
{{comments.comment}}