வயலு வரப்புல தான் வண்ண மயில் நான் நடக்க!

Jul 31, 2026,02:58 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


வயலு வரப்புல தான் 

வண்ண மயில் நான் நடக்க

புயலும் மழை அடிக்க 

புடவையும் மழை நனைக்க


நானும் குடை பிடிச்சு 

நடக்கிறேன் தான் நனஞ்சு

தரையும் வழுக்குதே

தடுமாற்றம் மாகுதே


மழைநீர் வெள்ளம் வந்து 

வயலையும் தான் மூழ்கடிக்க

மனமும் படபடக்க 

மழைநீரை நா கடக்க




வீடு வந்து 

சேர்வதற்கு 

வெகு சிரமம் ஆயிருச்சு 


தலை துவட்டி 

துணி மாத்தி

தரமான பால் வாங்கி


சூடான காஃபி போட்டு 

சுக்கையும் தட்டிப் போட்டு

மாமனுக்கு தந்து 

மரியாதை செய்யனுமே


சாமிக்கு விளக்கேற்றி 

குங்குமம் பொட்டு வச்சு

குல சாமி கோவிலுக்கு 

கூட்டிக்கிட்டு போகணும்


குடும்பம் நலமாக 

கும்பிட்டு வேண்டனும்

பிள்ளைங்க குட்டியோட 

பெருமையுடன் வாழணும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானம் நீர்நிலை ஆகிறது.. நீரில் ஒளியோன் காணும் கொக்குகள்!

news

விரைந்திங்கு வாருமம்மா வேண்டும் வரம் தாருமம்மா!

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

வயலு வரப்புல தான் வண்ண மயில் நான் நடக்க!

news

இமைப் பொழுதும் நமைப் பிரியா ஆண்டவனுக்கு நன்றி !

news

சிந்தனைச் சிதறல்.. பள்ளம் இல்லா மேடுகள் இல்லை.. தடைகள் இல்லா சாதனைகளும் இல்லை!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

ஆடியில் ஆடி வரும் மெல்லிடையாள்.. தேன் தமிழ் மொழியாள் !

அதிகம் பார்க்கும் செய்திகள்