வயலு வரப்புல தான் வண்ண மயில் நான் நடக்க!

Jul 31, 2026,02:58 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


வயலு வரப்புல தான் 

வண்ண மயில் நான் நடக்க

புயலும் மழை அடிக்க 

புடவையும் மழை நனைக்க


நானும் குடை பிடிச்சு 

நடக்கிறேன் தான் நனஞ்சு

தரையும் வழுக்குதே

தடுமாற்றம் மாகுதே


மழைநீர் வெள்ளம் வந்து 

வயலையும் தான் மூழ்கடிக்க

மனமும் படபடக்க 

மழைநீரை நா கடக்க




வீடு வந்து 

சேர்வதற்கு 

வெகு சிரமம் ஆயிருச்சு 


தலை துவட்டி 

துணி மாத்தி

தரமான பால் வாங்கி


சூடான காஃபி போட்டு 

சுக்கையும் தட்டிப் போட்டு

மாமனுக்கு தந்து 

மரியாதை செய்யனுமே


சாமிக்கு விளக்கேற்றி 

குங்குமம் பொட்டு வச்சு

குல சாமி கோவிலுக்கு 

கூட்டிக்கிட்டு போகணும்


குடும்பம் நலமாக 

கும்பிட்டு வேண்டனும்

பிள்ளைங்க குட்டியோட 

பெருமையுடன் வாழணும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்