சென்னை: விரைவில் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும் என்று பாஜக விருதுநகர் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. ரூ.1264 கோடி மதிப்பில், சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் கட்டத் திட்டமிடப்பட்ட இந்த மருத்துவமனைக்கு, பிரதமர் மோடியும் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. பிரதமர் பதவி ஏற்ற 2ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லோக்சபா தேர்தல் தொடங்க உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. 33 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2019ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது தான் பணிகள் தொடங்கியுள்ளன.
இது குறித்து விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறுகையில், மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை அதிகநாட்களாக கட்டப்படாமல் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். முதற்கட்டமாக எல் அன்ட் டி நிறுவனம் கட்டுமான பணிகள் எல்லாம் தொடங்கியிருக்காங்க. இன்னும் 33 மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் இந்த ஹாஸ்பிடலை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போராரு.
திருமங்கலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் அது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. கள்ளிக்குடி தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் இல்லாததினால் அந்த சாலையை கடக்க முயன்ற மக்கள் நிறைய பேர் இறந்திருக்கிறார்கள்.10 வருசமாக இங்கிருந்த எம்பி எந்த முயற்சியும் பண்ணல. நான் நிச்சயமாக அந்த மேம்பாலம் கட்டுவதற்கு உடனடியாக முயற்சி எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}