டெல்லி: காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக ஜனநாயகத்தைத் துண்டாக்கும் வேலையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்போம். இனி யாருமே அப்படி செய்ய கனவில் கூட நினைக்கக் கூடாத வகையில் மிகக் கடுமையான நடவடிக்கையாக அது இருக்கும் என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ரூ. 1800 கோடி வரி கட்ட வேண்டும் என்று கூறி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறை தங்களுக்கு அனுப்பி வரும் நோட்டீஸ்களை எதிர்த்து டெல்லி கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி போட்டிருந்த வழக்குகளை கோர்ட் டிஸ்மிஸ் செய்த அடுத்த நாளே இப்படி ஒரு நோட்டீஸை வருமான வரித்துறை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வங்கிக் கணக்குகளை முடக்கியதால் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு செலவிட பணம் இல்லாமல் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போது ரூ. 1800 கோடிக்கு வரி கட்டுமாறு கூறி வருமான வரித்துறை அனுப்பியுள்ள புதிய நோட்டீஸால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸை எதிர்த்து நாடு தழுவிய அளவில் நாளை பெரும் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மறுபக்கம் ராகுல் காந்தி பரபரப்பான டிவீட் போட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஜனநாயகத்தை சிதைத்து துண்டாக்க நினைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் யாருமே இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட அஞ்சும் அளவுக்கு அந்த நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும். இது நான் தரும் உத்தரவாதம் என்று கடுமையாக கூறியுள்ளார் ராகுல் காந்தி.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}