சென்னை: மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, கந்தர்வகோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரியலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது

இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை விடுமுறையை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் இந்தப் பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனால் மழை லீவு காரணமாக குஷியாகியுள்ள மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக விடுமுறை விட்டு படிப்பு பாழாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் அதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. எனவே மாணவர்களே, மழையை இன்னிக்கு நல்லா அனுபவிங்க.. சனிக்கிழமை ஸ்கூலுக்குப் போய் ஜாலியா பாடத்தையும் படிச்சுருங்க.. அவ்வளவுதானே!
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
{{comments.comment}}