சென்னை: மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, கந்தர்வகோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரியலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது

இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை விடுமுறையை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் இந்தப் பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனால் மழை லீவு காரணமாக குஷியாகியுள்ள மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக விடுமுறை விட்டு படிப்பு பாழாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் அதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. எனவே மாணவர்களே, மழையை இன்னிக்கு நல்லா அனுபவிங்க.. சனிக்கிழமை ஸ்கூலுக்குப் போய் ஜாலியா பாடத்தையும் படிச்சுருங்க.. அவ்வளவுதானே!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}