சென்னை: மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, கந்தர்வகோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரியலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது
இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை விடுமுறையை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் இந்தப் பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனால் மழை லீவு காரணமாக குஷியாகியுள்ள மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக விடுமுறை விட்டு படிப்பு பாழாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் அதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. எனவே மாணவர்களே, மழையை இன்னிக்கு நல்லா அனுபவிங்க.. சனிக்கிழமை ஸ்கூலுக்குப் போய் ஜாலியா பாடத்தையும் படிச்சுருங்க.. அவ்வளவுதானே!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}