சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வெயில் அதிகரித்து வரும் நிலையில், வட கடலோரப் பகுதிகளில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது.மேலும் வரும் நாட்களில் வெப்ப நிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனிடைய இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை 87 சதவீதம் என்ற சராசரி அளவை விட 106% கூடுதலாக மழைப்பொழிவு இருக்குமாம்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க நிலையில், கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். அதேபோல் கர்நாடகாவிலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}