சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆகிய மாவட்டங்களில் மீண்டும் பருவமழை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்த மாத இறுதியில் பருவக்காற்று தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
மேலும் வடகடலோர மாவட்டங்களில் வெயில் குறைந்து மீண்டும் இடியுடன் கூடிய கனமழை தொடர கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில பகுதிகளில் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் வெக்கை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவு நேரத்தில் குளுமையும் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆகிய மாவட்டங்களில் பருவமழை மீண்டும் தொடங்கி பரவலாக பெய்ய வாய்ப்புள்ளது . குறிப்பாக வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இனி வரும் நாட்களில் வெயில் குறைந்து இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். இந்த மழை பெய்யும்போது, குறைந்தது 45 நிமிடங்கள் வரை நீடிக்குமாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வானம் மேக மூட்டமாக இருந்து வந்தது. அதேசமயம், கடந்த 2 நாட்களாக வெயில் வெளுத்தது. இன்று காலை முதல் வானம் மூடி மூடி வருகிறது. கூடவே வெயிலும் வெளுக்கிறது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}