எப்போ.. ஓ மை காட்.. ஸாரி.. திருவண்ணாமலை மண் சரிவு பலி குறித்து.. ரஜினிகாந்த் கருத்து!

Dec 09, 2024,09:39 AM IST

சென்னை: திருவண்ணாமலையில் நடந்த மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியானது குறித்து நடிகர் ரஜினிகாந்த், எப்போ என்று கேட்டு வருத்தம் தெரிவித்தார்.

கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களில் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் கூலி படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.



இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலை மண் சரிவு மரணம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் எப்போ என்று கேட்டார். செய்தியாளர்கள் மழை சமயத்தில்நடந்த சம்பவம் என்று விளக்கிக் கூறிய பிறகு, ஓ மை காட் என்று கூறிய ரஜினிகாந்த் ஸாரி என்று வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இல்லை, கூலிக்குப் பிறகுதான் எல்லாமே என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

news

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

news

தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

news

ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

news

கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

news

ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?

news

பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

news

இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!

news

முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்