சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த 170 வது படத்துக்கு தயாராகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கொச்சி செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 170வது படத்தின் படப்பிடிப்புக்காக கொச்சிக்கு செல்கிறேன். இப்படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும். 170 ஆவது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
ஜெயிலர் படம் நன்றாகப் போகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியிடப்பட்டு 18 நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் ரூ. 315 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் இறங்கி விட்டார் ரஜினிகாந்த். மறுபக்கம், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாபாரத்தில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து ரஜினிகாந்த் படங்கள் வரவுள்ளதால் அவரது ரசிகர்கள் ஹேப்பி மோடிலேயே உள்ளனர்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}