- ரதிதேவி
உந்தன் கரங்களுடன்
கரம் கோர்க்க சில நொடிகள்......
கோர்த்த கரங்களுக்கு
இதழ் குவித்து
முத்தமிட சில நொடிகள்....
தோள் மீது சாய்ந்து
விழிகள் மூட
சில நொடிகள்....
நெற்றி முகர்ந்து
முத்தமிட சில நொடிகள்.....
கரம் கோர்த்து
தென்றலோடு நடக்க
சில நொடிகள்....
இரு விழிகளும் இமைக்காமல்
மோதிக் கொள்ள
சில நொடிகள்.....
உந்தன் மழலைச்
சிரிப்பில்
எனை மறக்க
சில நொடிகள்.....
தென்றல் மழைக்
குடைக்குள்
முகம் மலர
சில நொடிகள்.....
நின் மடியில்
தலை வைத்து
விழி மூட
சில நொடிகள்....
சில நொடிகளுக்குள்
வாழ்வின் யுகமே....!
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}