சண்டிகர்: ராணுவத்திற்கு உதவ தன்னார்வலர்கள் வரலாம் என்ற அறிவிப்பை அடுத்து சண்டிகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலின் போது ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேர் பலியாயினர். இதன் காரணமாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8,9ம் தேதிகளில் நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நாள்தோறும் கடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சண்டிகரில் துணை ஆணையர் நிஷாந்த் குமார் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்பு படையில் சேருமாறும், ஆர்வமுள்ளவர்கள் இன்று காலை 10 மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரலாம் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பை பார்த்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இன்று காலை முதல் சண்டிகரில் குவித்து வருகின்றனர். அது மட்டும் இன்றி இந்திய ராணுவத்திற்கு உதவத் தயார் எனவும் கோஷமிட்டு வருகின்றனர். இந்த தன்னார்வலர்களுக்கான பயிற்சிகள் இன்று இரவு 10.30 மணியளவில் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி வருகிறது.
30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்
கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு.. வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அட்வைஸ்!
கரூர் சம்பவத்திற்குப் பின்னர் கூடும்.. தவெகவின் சிறப்புப் பொதுக்குழு.. என்ன பேசப் போகிறார் விஜய்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 05, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும் ராசிகள்
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
{{comments.comment}}