அனைத்து கஷ்டங்களையும் தூள் தூளாக்கும் சஸ்திர பந்தம்... ஒருமுறை படித்து பாருங்க

Nov 09, 2024,10:15 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை : முருகப் பெருமானுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று தான் சஸ்திர பந்தம். பாம்பன் சுவாமிகளால் அருளப்பட்ட இந்த நான்கு வரி மந்திரம் நம்முடைய வாழ்வில் இருக்கும் எப்படிப்பட்ட துன்பத்தையும் போக்கக் கூடியதாகும். 


வெறும் 55 எழுத்துக்கள் மட்டும் கொண்ட இந்த மந்திரத்தை ஒரு புள்ளி வரைபடமாக வரைந்தால் வேலின் வடிவம் தோன்றும். வேல் வேறு, முருகன் வேறு கிடையாது என்பது முருக பக்தர்கள் அனைவருக்கும் தெரியும். சஸ்திர பந்தத்தில் வரும் இந்த 55 எழுத்துக்களையும் கீழிருந்த மேலாக வாசித்து, பிறகு மீண்டும் மேலிருந்து கீழ் இறங்கி வருவது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்.


அதாவது முருகப் பெருமானின் திருவடியில் அருள் வேண்டி துவங்கி, அவரது தலை வரை படிப்படியாக வணங்கி, பிறகு மீண்டும் அவரது திருவடிகளை வந்து அடைவதாக அர்த்தம்.




சஸ்திர பந்தம் :


வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா

மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ

மாபாசம் போக மதிதேசார் மாபூதம்

வாபாதந் தாவேலவா.


(பதம் பிரித்தது)


வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா

மாலை பூண் ஏம திற மால் வலர் தே – சாலவ

மா பாசம் போக மதி தேசு ஆர் மா பூதம்

வா பாதம் தா வேலவா


விளக்கம்: 


தூயவனே! வேதாந்த விலாசக் கடவுளே! பேரின்பமெனுஞ் சுவானுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்வோனே, வன்மை சான்ற திருமாலுக்கும், வல்லவர்களுக்கும், கடவுளே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும், ஒழிய ஞானமும், புகழுள்ள, பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க.


படிக்கும் முறையும், பலன்களும் :


தொழில் வளர்ச்சி ஏற்பட, செல்வ செழிப்பு உண்டாக, கழுத்தை நெருக்கும் கடன் பிரச்சனை தீர, வாழ்க்கையில் உயர் நிலையை அடைய, உயர் பதவி கிடைக்க, தீய எண்ணங்கள், பயம், நோய் ஆகியவை நீங்க என அனைதஅது விதமான நன்மைகளும் ஏற்பட இந்த பதிகத்தை படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைத்தோ இந்த மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். முருகப் பெருமானுக்குரிய செவ்வாய் கிழமை, சஷ்டி, கிருத்திகை, விசாகம் ஆகிய நாட்களில் படிக்க துவங்குவது சிறப்பு. தினமும் படிப்பது மிகவும் விசேஷம். தினமும் படிக்க முடியாதவர்கள் வாரத்திற்கு ஒருநாள் செவ்வாய்கிழமையில் மட்டும் இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதை காண முடியும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

news

சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்

news

டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!

news

இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

news

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

news

அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?

news

சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!

news

மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)

அதிகம் பார்க்கும் செய்திகள்