- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : முருகப் பெருமானுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று தான் சஸ்திர பந்தம். பாம்பன் சுவாமிகளால் அருளப்பட்ட இந்த நான்கு வரி மந்திரம் நம்முடைய வாழ்வில் இருக்கும் எப்படிப்பட்ட துன்பத்தையும் போக்கக் கூடியதாகும்.
வெறும் 55 எழுத்துக்கள் மட்டும் கொண்ட இந்த மந்திரத்தை ஒரு புள்ளி வரைபடமாக வரைந்தால் வேலின் வடிவம் தோன்றும். வேல் வேறு, முருகன் வேறு கிடையாது என்பது முருக பக்தர்கள் அனைவருக்கும் தெரியும். சஸ்திர பந்தத்தில் வரும் இந்த 55 எழுத்துக்களையும் கீழிருந்த மேலாக வாசித்து, பிறகு மீண்டும் மேலிருந்து கீழ் இறங்கி வருவது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்.
அதாவது முருகப் பெருமானின் திருவடியில் அருள் வேண்டி துவங்கி, அவரது தலை வரை படிப்படியாக வணங்கி, பிறகு மீண்டும் அவரது திருவடிகளை வந்து அடைவதாக அர்த்தம்.

சஸ்திர பந்தம் :
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேலவா.
(பதம் பிரித்தது)
வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா
மாலை பூண் ஏம திற மால் வலர் தே – சாலவ
மா பாசம் போக மதி தேசு ஆர் மா பூதம்
வா பாதம் தா வேலவா
விளக்கம்:
தூயவனே! வேதாந்த விலாசக் கடவுளே! பேரின்பமெனுஞ் சுவானுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்வோனே, வன்மை சான்ற திருமாலுக்கும், வல்லவர்களுக்கும், கடவுளே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும், ஒழிய ஞானமும், புகழுள்ள, பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க.
படிக்கும் முறையும், பலன்களும் :
தொழில் வளர்ச்சி ஏற்பட, செல்வ செழிப்பு உண்டாக, கழுத்தை நெருக்கும் கடன் பிரச்சனை தீர, வாழ்க்கையில் உயர் நிலையை அடைய, உயர் பதவி கிடைக்க, தீய எண்ணங்கள், பயம், நோய் ஆகியவை நீங்க என அனைதஅது விதமான நன்மைகளும் ஏற்பட இந்த பதிகத்தை படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைத்தோ இந்த மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். முருகப் பெருமானுக்குரிய செவ்வாய் கிழமை, சஷ்டி, கிருத்திகை, விசாகம் ஆகிய நாட்களில் படிக்க துவங்குவது சிறப்பு. தினமும் படிப்பது மிகவும் விசேஷம். தினமும் படிக்க முடியாதவர்கள் வாரத்திற்கு ஒருநாள் செவ்வாய்கிழமையில் மட்டும் இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதை காண முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெருவெள்ளமா.. நீங்க வாங்க சந்திக்க நாங்க ரெடி.. கெத்தாக காத்திருக்கும் பள்ளிக்கரணை!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
தொடர்ந்து 4வது நாளாக சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,120 குறைவு!
தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா.. 2026ல் வரிசையாக களை கட்டப் போகும் சட்டசபைத் தேர்தல்கள்
இது தியாகம்.. டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தீவிரவாதி டாக்டர் உமர் பரபரப்பு வீடியோ
கார்த்திகை மாத சிவராத்திரி.. நாளை கார்த்திகை அமாவாசை.. அடுத்தடுத்து சிறப்பு!
சபரிமலை பக்தர்களே.. மூளை தின்னும் அமீபா அச்சுறுத்தல்.. இதைக் கடைப்பிடிங்க போதும்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 18, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
{{comments.comment}}