ரோம்: துனிசியாவில் இருந்து 60 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு பயணிக்கும் பெரும்பாலானோர் சட்ட விரோத பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளும் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்திலேயே முடிகின்றன. இதனைக் கட்டுப்படுத்த கடலோர போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த சட்ட விரோத பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து சட்ட விரோதமாக சுமார் 60 அகதிகளுடன் படகு ஒன்று இத்தாலி நோக்கி பயணித்தது. கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கிய படகை திடீர் என ராட்சத அலை தாக்கியது. இதில் அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த படகில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
{{comments.comment}}