இத்தாலியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

Mar 21, 2025,06:12 PM IST

ரோம்: துனிசியாவில் இருந்து 60 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு பயணிக்கும் பெரும்பாலானோர் சட்ட விரோத பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளும் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்திலேயே முடிகின்றன. இதனைக் கட்டுப்படுத்த கடலோர போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இருப்பினும் இந்த சட்ட விரோத பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.




அந்த வகையில், வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து சட்ட விரோதமாக சுமார் 60 அகதிகளுடன் படகு ஒன்று இத்தாலி நோக்கி பயணித்தது. கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கிய படகை திடீர் என ராட்சத அலை தாக்கியது. இதில் அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த படகில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்