சென்னை: நாட்டின் 76வது குடியரசு தின விழா சென்னை மெரீனா கடற்கரையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் மூவண்ணக் கொடியை ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
நாட்டின் 76வது குடியரசு தின விழா எழுச்சியுடன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் கர்தவ்யா பாதையில் இன்று சிறப்பான அணிவகுப்புடன் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
சென்னையில் கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நீதிபதிகள், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடியேற்றும் முன்பு ஹெலிகாப்டர் மூலம் ரோஜாப் பூக்கள் தூவப்பட்டது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநில கலைக்குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு துறைகளின் அலங்கார ரதங்களும் அணிவகுத்து வந்தன. வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பதக்கங்கள்:
வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், தீயணைப்பு காவலர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவுக்கு வழங்கப்பட்டது. இவர் கொரோனா காலத்தில் 500க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய உதவினார்.
சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தேனிமாவட்டத்தைச் சேர்ந்த ரா.முருகவேலுக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் பெ.சின்னகாமணன், கி.மகாமார்க்ஸ், க.கார்த்திக், கா.சிவா, ப.பூமாலை ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மெரீனா கடற்கரையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்தும் மாற்றப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}