குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Apr 09, 2025,02:21 PM IST
மும்பை: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று ஆர்.பி.ஐ.கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம். இந்த ரெப்போ வட்டி விகிதம் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமல் 6.5 சதவீதம் என்ற அளவில் இருந்து வந்த நிலையில் , கடந்த பிப்ரவரியில் 0.25 சதவீதம் குறைந்தது. 




இந்நிலையில் இன்று ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் அரை சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.  உணவுப்பொருள் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பில் வட்டி விகிதத்தை குறைந்துள்ளது ரிசர்வ் வங்கி.



இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைப்பினால் வீடு,வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. இந்த வட்டி குறைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அனைத்துக் கோணங்களிலும் விசாரணை.. உண்மையை கண்டறிவோம்.. அமைச்சர் அமித்ஷா

news

டெல்லி செங்கோட்டை அருகே.. கார் வெடித்துச் சிதறியது.. பலர் பலி.. டெல்லி முழுவதும் உஷார்

news

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மனதை உலுக்கியது.. ராகுல் காந்தி, பிரியங்கா வேதனை

news

டெல்லி குண்டுவெடிப்பு அதிர்ச்சி தருகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி வேதனை

news

அதிமுக கூட்டணி.. வருவதற்கு யோசிக்கும் தவெக விஜய்.. எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்ன?

news

விஜய்க்கு என்ன பலம் உள்ளது? அவர் எப்படி தனியாக திமுகவை வீழ்த்துவார்?: வானதி சீனிவாசன் கேள்வி

news

Wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பச்சைப் பொய் பழனிசாமி.. திமுக ஆர்.எஸ். பாரதி தாக்கு

news

தமிழ்நாட்டில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை... அண்ணாமலை விமர்சனம்!

news

தமிழகத்தில் மழை தொடரும்... நாளை 3 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்