நம் நாட்டில் நிறைய பேருக்கு சொல் விளையாட்டுக்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் தமிழில் உள்ள சொல் விளையாட்டுகள் போல வேறு மொழியில் இருக்குமா என்று தெரியவில்லை.
சொல் விளையாட்டுக்கள் என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்..அது வேறு ஒன்றும் இல்லை. நாம் கேட்கும் கேள்விக்கு அதில் ஒளிந்திருக்கும் பொருளை கண்டுபிடிப்பதே சொல் விளையாட்டுக்கள். அதே தான் நவ நாகரிக காலகட்டத்தில் விடுகதைகள் என்றும் கூறி வருகின்றனர். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளை தூண்டவே விடுகதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விடுகதைகள் நமது அறிவையும், சிந்தனையையும், யோசனையையும் தூண்டி விடுபவை. நம்மை கேள்வி கேட்க வைப்பவை, சிந்திக்க வைப்பவை. இதனால் நாமளும் ஒரு அறிவாளியாக இருக்க மாட்டோமா என பலரும் கேட்கப்படும் விடுகதைகளுக்கு ஆர்வமாக பதில் கூறி வருகின்றனர். அப்படி பதில் கூறும்போது நம் மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி.
எல்லோரும் அறிவாளியா இருக்கம்போது நீங்களும் அப்படி இருக்க வேண்டாமா.. சரி நீங்களும் அறிவாளியான்னு செக் பண்ணிப் பார்ப்போமா.. வாங்க!
1. எங்க அக்கா சிவப்பு குளித்தால் கருப்பு அது என்ன..?
2. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன..?
3. ஒருத்தன் வாளுக்கு உலகமே நடுங்கும் அவன் யார்..?
4. ஒரு அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன..?
5. ஒரு கரண்டி மாவில் ஊரெல்லாம் தோசை அது என்ன..?
6. தண்ணீரில் கரைந்திடுவான் ஆனால் வெயிலில் வைத்தால் உயிர் பிழைப்பான் அது என்ன..?
7. திறந்த பெட்டியை மூட முடியாது அது என்ன..?
8. பல்லே துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அது என்ன..?
9. நமக்கு சொந்தமான ஒன்றை ஊரே அதிகம் பயன்படுத்தும் அது என்ன..?
10. குண்டன் குழியில் விழுவான் குச்சிப்பையன் தூக்கி விடுவான் அவன் யார்..?
(பதில்கள்: 1. அடுப்புக்கரி, 2. வெண்டைக்காய், 3. தேள், 4. பற்கள், 5. நிலா, 6. உப்பு, 7. தேங்காய், 8. சீப்பு, 9. பெயர், 10. பணியாரம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}