நம் நாட்டில் நிறைய பேருக்கு சொல் விளையாட்டுக்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் தமிழில் உள்ள சொல் விளையாட்டுகள் போல வேறு மொழியில் இருக்குமா என்று தெரியவில்லை.
சொல் விளையாட்டுக்கள் என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்..அது வேறு ஒன்றும் இல்லை. நாம் கேட்கும் கேள்விக்கு அதில் ஒளிந்திருக்கும் பொருளை கண்டுபிடிப்பதே சொல் விளையாட்டுக்கள். அதே தான் நவ நாகரிக காலகட்டத்தில் விடுகதைகள் என்றும் கூறி வருகின்றனர். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளை தூண்டவே விடுகதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விடுகதைகள் நமது அறிவையும், சிந்தனையையும், யோசனையையும் தூண்டி விடுபவை. நம்மை கேள்வி கேட்க வைப்பவை, சிந்திக்க வைப்பவை. இதனால் நாமளும் ஒரு அறிவாளியாக இருக்க மாட்டோமா என பலரும் கேட்கப்படும் விடுகதைகளுக்கு ஆர்வமாக பதில் கூறி வருகின்றனர். அப்படி பதில் கூறும்போது நம் மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி.

எல்லோரும் அறிவாளியா இருக்கம்போது நீங்களும் அப்படி இருக்க வேண்டாமா.. சரி நீங்களும் அறிவாளியான்னு செக் பண்ணிப் பார்ப்போமா.. வாங்க!
1. எங்க அக்கா சிவப்பு குளித்தால் கருப்பு அது என்ன..?
2. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன..?
3. ஒருத்தன் வாளுக்கு உலகமே நடுங்கும் அவன் யார்..?
4. ஒரு அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன..?
5. ஒரு கரண்டி மாவில் ஊரெல்லாம் தோசை அது என்ன..?
6. தண்ணீரில் கரைந்திடுவான் ஆனால் வெயிலில் வைத்தால் உயிர் பிழைப்பான் அது என்ன..?
7. திறந்த பெட்டியை மூட முடியாது அது என்ன..?
8. பல்லே துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அது என்ன..?
9. நமக்கு சொந்தமான ஒன்றை ஊரே அதிகம் பயன்படுத்தும் அது என்ன..?
10. குண்டன் குழியில் விழுவான் குச்சிப்பையன் தூக்கி விடுவான் அவன் யார்..?
(பதில்கள்: 1. அடுப்புக்கரி, 2. வெண்டைக்காய், 3. தேள், 4. பற்கள், 5. நிலா, 6. உப்பு, 7. தேங்காய், 8. சீப்பு, 9. பெயர், 10. பணியாரம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}