சென்னை: நடிகர் ரோபோ சங்கர் தாத்தா ஆகியுள்ளார். அவரது மகள் இந்திரஜாவுக்கு இன்று மாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் ரோபோ சங்கர். சாதாரண மிமிக்ரி கலைஞராக மதுரை நகரத்து மேடைகளை அலங்கரித்து வந்தவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, ரோபோ சங்கரின் திறமைக்கு சரியான களம் அமைத்துக் கொடுத்தது. அங்கு ஆரம்பித்தது அவரது கலையுலகப் பயணம். இந்தப் பயணம் இன்று தமிழ்த் திரையுலகிலும் அவருக்கு நல்ல இடம் அமைத்துக் கொடுத்து உயர்த்தியுள்ளது.

ரோபோ சங்கர் காதல் மணம் புரிந்தவர். அவரது மனைவி பெயர் பிரியங்கா. அவர் ஒரு நடனக் கலைஞர் ஆவார். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்தவர்தான் இந்திரஜா. தந்தை வழியில் காமெடியிலும் தாய் வழியில் நடனத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் இந்திரஜா. அவருக்கு கடந்த ஆண்டு முறை மாமனான கார்த்திக்குடன் திருமணம் ஆனது. அதைத் தொடர்ந்து கர்ப்பம் தரித்தார் இந்திரஜா.
இந்த நிலையில் இன்று மாலை இந்திரஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரஜா தாயாகியிருப்பது ரோபோ சங்கர் குடும்பத்தினரையும், கார்த்திக் குடும்பத்தினரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. தாத்தா ஆகியுள்ள ரோபோ சங்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’
Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?
பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!
இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!
சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!
உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!
ஆசையே அலை போலே!
{{comments.comment}}