ஆடவர் இரட்டையர் டென்னிஸ்.. உலகின் மிகவும் வயது முதிர்ந்த நம்பர் 1 வீரர்.. யார் தெரியுமா?

Jan 24, 2024,06:09 PM IST

சிட்னி: உலகின் மிகவும் வயதான நம்பர் 1  ஆடவர் கலப்பு இரட்டையர் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரோஹன் போபண்ணா பெற்றுள்ளார்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள ரோஹன் போபண்ணா, நம்பர் 1 வீரர் என்ற அந்தஸ்துடன் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

போபண்ணாவுடன் இணையாக ஆடுபவர் மேத்யூ எப்டன். இவர் உலகின் 2வது நிலை வீரராக அரை இறுதிப் போட்டியில் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் அதிக வயது கொண்ட முதல் நிலை வீரர் என்ற பெருமை ரோஹன் போபண்ணாவுக்குக் கிடைத்துள்ளது. தற்போது ரோஹன் போபண்ணாவுக்கு 43 வயதாகிறது. தற்போது விளையாடும் வீரர்களிலேயே அவர்தான் அதிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2023 அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியிலும் ரோஹன் போபண்ணா, மிகவும் வயது முதிர்ந்த நம்பர் ஒன் வீரராக களம் கண்டிருந்தார் என்பது நினைவு இருக்கலாம்.


20 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் விளையாடி வருகிறார் போபண்ணா. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் நுழைந்தபோது, நம்பர் 3 வீரராக அவர் இருந்தார். அரை இறுதிப் போட்டிக்கு அவர் முதல் நிலை வீரராக முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இதுவரை 17 முறை விளையாடியுள்ள ரோஹன் போபண்ணா, இப்போதுதான் முதல்முறையாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


முன்னதாக கால் இறுதிப் போட்டியில் போபன்னா ஜோடி தங்களை எதிர்த்து மோதிய அர்ஜென்டினா நாட்டு ஜோடியான மேக்சிமோ கோன்சலஸ் - ஆண்டிரஸ் மால்டனி ஜோடியை ஒரு மணி நேரம் 46 நிமிடங்களில் நடந்த போட்டியில், தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. அர்ஜென்டினா ஜோடியை 6-4, 7-6 (5) என்ற செட் கணக்கில் போபண்ணா -மாத்யூ ஜோடி வென்றது.


அரை இறுதிப் போட்டியில் தாமஸ் மச்சாக் - ஜீசன் ஜாங் சீசன் ஜான் ஜோடியை எதிர்த்து போபண்ணா ஜோடி விளையாடவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்