துபாய்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் பயன்படுத்தும் அதி நவீன சொகுசு காரான ஆரஸ் வகை கார்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் விற்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது.
விலாடிமிர் புடின் பயன்படுத்தும் அதி நவீன கார்களில் ஒன்றுதான் ஆரஸ் எனப்படும் அதி நவீன சொகுசு கார். ஆரஸ் நிறுவனம் தயாரிக்கும் மிக விலை உயர்ந்த சொகுசுக் கார் இது. இந்தக் காரை தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் விற்பனை செய்யவுள்ளனர். அதாவது ரஷ்யாவிலிருந்து இந்தக் காரின் உதிரி பாகங்களை எமிரேட்ஸுக்கு அனுப்பி அங்கு அசெம்பிள் செய்து விற்கவுள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பை ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி மன்டுரோவ் தெரிவித்தார். தற்போது ஆரஸ் செனட் கார்களை முதல் கட்டமாக எமிரேட்ஸில் தயாரிக்கின்றனர். இந்தக் காரைத்தான் புடின் பயன்படுத்தி வருகிறார். இந்தக் கார் தவிர்த்து விரைவில் ஆரஸ் கொமன்டன்ட் எஸ்யுவி கார்களையும் எமிரேட்ஸில் தயாரிக்கவுள்ளனர். இதுதொடர்பான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் மன்டுரோவ் தெரிவித்தார்.
இதுதவிர எமிரேட்ஸில் டீலர்களை நியமிக்கவும் ஆரஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இங்கு விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கார்களைத் தயாரிக்கும் பிரிவையும் அது தொடங்கவுள்ளது.
எமிரேட்ஸை, மையமாக வைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆரஸ் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தையும் ரஷ்யா வைத்துள்ளது. எதிர்காலத்தில் சவூதி அரேபியாவுக்கும் தனது விற்பனைப் பிரிவை விரிவாக்கும் திட்டம் ரஷ்யாவிடம் இருப்பதாகவும் தெரிகிறது.
ஆரஸ் கார்களின் வரலாறு

2013ம் ஆண்டு முதல்தான் ஆரஸ் கார்கள் விற்பனை தொடங்கியது. புடின் விருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட்ட கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை புடின் வெளிநாட்டுக் கார்களைத்தான் அதிகம் பயன்படுத்தி வந்தார். ஆனால் அதை நிறுத்தி விட்டு ரஷ்யத் தயாரிப்புக் கார்களைப் பயன்படுத்த முடிவெடுத்தார். அதன் விளைவாகப் பிறந்ததுதான் ஆரஸ் கார்கள்.
புடின் மட்டும் ஆரம்பத்தில் இதைப் பயன்படுத்தி வந்தார். பின்னர் இதை பொதுமக்களுக்கும் விற்க முடிவெடுத்து வர்த்தகம் விஸ்தரிக்கப்பட்டது. தற்போது வெளிநாடுகளுக்கும் இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது.
ஆரஸ் செனட் செடன் ரக காரின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 3 கோடியே 69 லட்சத்து 18 ஆயிரத்து125 ரூபாய் ஆகும். இதுவேர ஆரஸ் கொமன்டன்ட் கார் விலை 4 கோடி வரை விலை வரும். என்ன வாங்கலாமா?
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}