மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து சல்மான் கான் சார்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அன்டர்வேர்ல்ட் டான் லாரன்ஸ் பிஷ்னாய் என்பவரது குரூப் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
பந்திரா காவல் நிலையத்தில் சல்மான் கான் சார்பில் அவரது வழக்கறிஞர் குழு புகாரைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள லாரன்ஸ் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது குழுவினர் மும்பையில் ஆக்டிவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. சிறைக்குள் இருந்தபடி தனது கும்பலை லாரன்ஸ் செயல்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த லாரன்ஸ்தான், பிரபல பஞ்சாபி மொழிப் பாடகர் சித்து மூஸே வாலாவின் படுகொலையை தனது கும்பல் மூலம் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
சனிக்கிழமை பிற்பகலில் சல்மான் கானுக்கு ஒரு இமெயில் வந்துள்ளது. அதில், கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டரும், லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளியுமான கோல்டி பிரார், சல்மான்கானை சந்திக்க விரும்புவதாக கூறப்பட்டிருந்தது. மேலும் சல்மான் கானுக்கு அதில் மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பந்த்ரா காவல்நிலையத்தில் சல்மான் கான் குழுவினர் புகார் கொடுத்தனர்.
லாரன்ஸ், சல்மான் கானுக்கு மிரட்டல் விடுப்பது இது புதிதல்ல. ஏற்கனவே 2018ம் ஆண்டும் இதேபோல மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து லாரன்ஸ் கும்பல் மிரட்டல் விடுத்து வந்ததால், சல்மான் கானுக்கான பாதுகாப்பை மகாராஷ்டிர காவல் துறை ஒய்பிளஸ் ஆக அதிகரித்தது. சல்மான் கான் பல ஆண்டுகளாகவே தனது பாதுகாப்புக்காக தனிக் குழுவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாடிகார்டாக குர்மீத் சிங் எனப்படும் ஷெரா நிழ���் போல சல்மானை தொடர்ந்து வருகிறார் என்பதும் நினைவிருக்கலாம்.
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}