சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்.. டான் லாரன்ஸ் மீது போலீஸில் புகார்

Mar 20, 2023,11:24 AM IST

மும்பை:  நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து சல்மான் கான் சார்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அன்டர்வேர்ல்ட் டான் லாரன்ஸ் பிஷ்னாய் என்பவரது குரூப் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.


பந்திரா காவல் நிலையத்தில் சல்மான் கான் சார்பில் அவரது வழக்கறிஞர் குழு புகாரைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 


குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள லாரன்ஸ் தற்போது டெல்லி திஹார்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது குழுவினர் மும்பையில் ஆக்டிவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. சிறைக்குள் இருந்தபடி தனது கும்பலை லாரன்ஸ் செயல்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த லாரன்ஸ்தான், பிரபல பஞ்சாபி மொழிப் பாடகர் சித்து மூஸே வாலாவின் படுகொலையை தனது கும்பல் மூலம் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.



சனிக்கிழமை பிற்பகலில் சல்மான் கானுக்கு ஒரு இமெயில் வந்துள்ளது. அதில், கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டரும், லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளியுமான  கோல்டி பிரார், சல்மான்கானை சந்திக்க விரும்புவதாக கூறப்பட்டிருந்தது. மேலும் சல்மான் கானுக்கு அதில் மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பந்த்ரா காவல்நிலையத்தில் சல்மான் கான் குழுவினர் புகார் கொடுத்தனர்.


லாரன்ஸ், சல்மான் கானுக்கு மிரட்டல் விடுப்பது இது புதிதல்ல. ஏற்கனவே 2018ம் ஆண்டும் இதேபோல மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து லாரன்ஸ் கும்பல் மிரட்டல் விடுத்து வந்ததால்,  சல்மான் கானுக்கான பாதுகாப்பை மகாராஷ்டிர காவல் துறை ஒய்பிளஸ் ஆக அதிகரித்தது. சல்மான் கான் பல ஆண்டுகளாகவே தனது பாதுகாப்புக்காக தனிக் குழுவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாடிகார்டாக குர்மீத் சிங் எனப்படும் ஷெரா நிழ���் போல சல்மானை தொடர்ந்து வருகிறார் என்பதும் நினைவிருக்கலாம்.


சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்