சென்னை : நடிகை சமந்தா தான் பாலி தீவில் உற்சாகமாக பொழுதை கழிக்கும் போட்டோக்கள், வீடியோக்களை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இணையத்தை அதிரிபுதிரி ஆக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் விவாகரத்து பற்றிய தகவல்கள் மீடியாக்கள் பரவ துவங்கியது முதல் சமந்தா பற்றி என்ன தகவல் வெளி வந்தாலும் அது உடனடியாக டிரெண்டாகி வந்தது.
இவர்களின் விவாகரத்து பற்றிய தகவல்களே பல மாதங்களாக டாப் நியூசாக ஓடிக் கொண்டிருந்தது.. அது சற்று ஓய்ந்த நிலையில் தான் மயோசிட்டிஸ் என்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்த சமந்தா, இதற்காக சிகிச்சை பெற்று வரும் போட்டோக்களையும் வெளியிட்டு மீண்டும் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டார்.
அந்த பரபரப்பும் சற்றும் ஓய்ந்த நிலையில் சமீபத்தில், தான் சினிமாவில் இருந்து ஒரு வருடத்திற்கு பிரேக் எடுக்க போவதாகவும், உடல்நிலையில் க��னம் செலுத்த போவதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கு அடுத்த ஷாக் கொடுத்தார் சமந்தா. இதனால் சமந்தாவிற்கு ரூ.12 கோடி வரை இழப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் உடல்நிலையை காரணமாக அவர் சொல்லி உள்ளதால் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.
சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ள உள்ளதாக அறிவித்தாலும் தினமும் தான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை இன்ஸ்டாகிராமில் போட்டோவாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார் சமந்தா. காலையில் யோகா பயிற்சி செய்வது முதல், சமீபத்தில் சத்குருவின் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தது வரை அனைத்து போட்டோக்களையும் சமந்தா வெளியிட்டு வருகிறார். தற்போது சமந்தா தனது தோழியுடன் மாலி தீவில் ஓய்வெடுத்து வருகிறார்.அங்கு அவர் செய்யும் அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
முதல் முறையாக குட்டை தலை முடியுடன் இருக்கும் போட்டோவையும் சமந்தா வெளியிட்டுள்ளார். பாலி தீவில் தான் பார்த்து ரசித்த விஷயங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். விரைவில் தனது நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}