ஹைதராபாத்: இஸ்லாமிய முறைப்படி, தனது மகள்தான், சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து விட்டதாக சானியா மிர்ஸாவின் தந்தை இம்ரான் மிர்ஸா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை சனா ஜாவேத் என்பவரை சோயப் மாலிக் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த செய்தி இரு நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு முதலே உறவு சரியாக இல்லை என்று கூறப்பட்டது. இடையில் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த கல்யாணம் தற்போது முடிந்து விட்டது.
இருவருக்கும் இடையே எப்போது விவாகரத்து நடந்தது என்பது பலரையும் குழப்பியுள்ளது. ஆனால் இதுகுறித்து சானியா மிர்ஸாவின் தந்தை இம்ரான் மிர்ஸா விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், குலா முறைப்படி சானியா மிர்ஸாவும், சோயப்பும் பிரிந்து விட்டனர் என்று கூறியுள்ளார் அவர். குலா என்றால், இஸ்லாமிய முறைப்படி, ஒரு மனைவி, தனது கணவரை விட்டு தானாகவே பிரிந்து சென்று விடலாம். அந்த முறைப்படி, சானியா மிர்ஸா, சோயப்பை விட்டு அவராகவே விவாகரத்து செய்து பிரிந்து வந்து விட்டார்.
சானியா மிர்ஸா, சோயப் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது சானியாவுடன்தான் வசித்து வருகிறார். சோயப் திருமணம் குறித்து சானியா மிர்ஸா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. சோயப் மணந்துள்ள நடிகை சனா ஜாவேத், நிறைய டிவி சீரியல்களில் நடித்துள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமானவர். அவரது முதல் கணவர் பெயர் உமைர் ஜெய்ஸ்வால். 2020ம் ஆண்டு இந்தத் திருமணம் நடந்தது. அதன் பிறகு இருவரும் விவாகரத்து செய்து விட்டனராம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}