ஹய்யா ஜாலி.. அக்டோபர் 6ம் தேதி வரை.. பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

Sep 25, 2024,12:30 PM IST

சென்னை:   காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அந்த சந்தோஷ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு என மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே கால ஆண்டு விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டிருந்தது.




ஆனால் இந்த ஐந்து நாட்களில் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி நீங்கலாக  இரண்டு நாட்கள் மட்டுமே தேர்வு விடுமுறை விடப்படுவதால், மேலும் இரண்டு நாட்கள் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்படுமா என பெற்றோர்கள் மாணவர்களும் எதிர்பார்த்து காத்து வந்தனர். 


தற்போது அந்த  அறிவிப்பு வந்து விட்டது. அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.


அம்மாக்கள்தான் பாவம்.. வீடுகள் அல்லோகல்லப்படும்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்