சென்னை: காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அந்த சந்தோஷ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு என மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே கால ஆண்டு விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால் இந்த ஐந்து நாட்களில் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி நீங்கலாக இரண்டு நாட்கள் மட்டுமே தேர்வு விடுமுறை விடப்படுவதால், மேலும் இரண்டு நாட்கள் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்படுமா என பெற்றோர்கள் மாணவர்களும் எதிர்பார்த்து காத்து வந்தனர்.
தற்போது அந்த அறிவிப்பு வந்து விட்டது. அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
அம்மாக்கள்தான் பாவம்.. வீடுகள் அல்லோகல்லப்படும்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}