சென்னை: காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அந்த சந்தோஷ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு என மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே கால ஆண்டு விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால் இந்த ஐந்து நாட்களில் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி நீங்கலாக இரண்டு நாட்கள் மட்டுமே தேர்வு விடுமுறை விடப்படுவதால், மேலும் இரண்டு நாட்கள் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்படுமா என பெற்றோர்கள் மாணவர்களும் எதிர்பார்த்து காத்து வந்தனர்.
தற்போது அந்த அறிவிப்பு வந்து விட்டது. அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
அம்மாக்கள்தான் பாவம்.. வீடுகள் அல்லோகல்லப்படும்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}