சென்னை: காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அந்த சந்தோஷ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு என மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே கால ஆண்டு விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால் இந்த ஐந்து நாட்களில் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி நீங்கலாக இரண்டு நாட்கள் மட்டுமே தேர்வு விடுமுறை விடப்படுவதால், மேலும் இரண்டு நாட்கள் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்படுமா என பெற்றோர்கள் மாணவர்களும் எதிர்பார்த்து காத்து வந்தனர்.
தற்போது அந்த அறிவிப்பு வந்து விட்டது. அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
அம்மாக்கள்தான் பாவம்.. வீடுகள் அல்லோகல்லப்படும்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}