சென்னை: எஸ்டிபிஐ போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள படம் தான் அமரன். இப்படம் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், 3 நாட்களில் ரூ.100 கோடியையும் தாண்டியுள்ளது. இப்படத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் புதிய மைல் கல் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அமரன் படம் குறித்த சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
காஷ்மீர் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் உள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின்ர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் ராயப்பேட்டை இஸ்லாமியர்கள் இயக்கம் போராட்டம் நடத்துவதாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மட்டும் இன்றி இப்படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}