எஸ்டிபிஐ போராட்ட அறிவிப்பு எதிரொலி.. அமரன் படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

Nov 08, 2024,05:41 PM IST

சென்னை: எஸ்டிபிஐ போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள படம் தான் அமரன். இப்படம் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 


இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், 3 நாட்களில் ரூ.100 கோடியையும் தாண்டியுள்ளது. இப்படத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். 




அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் புதிய மைல் கல் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அமரன் படம் குறித்த சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. 


காஷ்மீர் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் உள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின்ர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் ராயப்பேட்டை இஸ்லாமியர்கள் இயக்கம் போராட்டம் நடத்துவதாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மட்டும் இன்றி இப்படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்