சென்னை: எஸ்டிபிஐ போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள படம் தான் அமரன். இப்படம் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், 3 நாட்களில் ரூ.100 கோடியையும் தாண்டியுள்ளது. இப்படத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.

அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் புதிய மைல் கல் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அமரன் படம் குறித்த சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
காஷ்மீர் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் உள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின்ர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் ராயப்பேட்டை இஸ்லாமியர்கள் இயக்கம் போராட்டம் நடத்துவதாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மட்டும் இன்றி இப்படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}