ஈரோடு: விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் நிறைவேற்றச் சொன்ன பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு விஜயமங்கலத்தில் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசுகையில், தவெக தலைவர் விஜய் வரும் 18-ம் தேதி விஜயமங்கலம் வரும்போது காவல்துறை என்னென்ன வேண்டுகோள் வைத்தார்களோ அதைவிட கூடுதலாக பாதுகாப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவைகள் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அனைத்தும் நாளை மதியத்திற்குள் நிறைவு செய்யப்படும்.

கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் பாட்டில்களில் குடிநீர் வழங்கப்படும். 20 இடங்களில் கழிப்பறை வசதியும், 3 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும். 60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு 20 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அடிப்படையில் 40 கேமராக்கள் பொருத்தப்படும். அவசர தேவைக்காக 40 வாக்கி-டாக்கிகள், 24 ஆம்புலன்ஸ், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் இடம் பெறுவார்கள். 20 சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் நிரப்பப்படும்.
காவல்துறை சார்பில் 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். க்யூ ஆர் கோடு இல்லாமல் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு அனைவரும் வரலாம். விஜயை பார்த்து விட்டு மகிழ்ச்சியாக செல்லலாம். கூட்டம் முடிந்த பின்னர் வெளியேற 14 வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}