சென்னை: தவெக தலைவர் விஜய்யை விமர்சிப்பதற்காக, மறைந்த திமுக நிறுவனர் அண்ணா மற்றும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் ஆகியோரை சனியன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் இந்த பேச்சுக்கு அதிமுக கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சீமான். அவரது பேட்டிகளிலும், பேச்சுக்களிலும் தவறாமல் விஜய் விமர்சனம் வந்து விடுகிறது. கடுமையாக காட்டமாக அவர் விஜய்யை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது விஜய்யை விமர்சிப்பதாக கருதிக் கொண்டு அண்ணா, எம்ஜிஆரை சனியன் என்று அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் சனிக்கிழமை பிரச்சாரம் மற்றும் அவரது கொள்கை குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் சீமான். அப்போது, அண்ணாவையும், எம்ஜிஆரையும் வச்சிக்கிட்டாப்ள. இதுல என்ன மாற்றம் வந்திருச்சு. இது ஒரு சனியன், இது ஒரு சனியன். இரண்டு சனியன்களையும் சட்டையாத் தச்சுட்டாப்ள. சனிக்கிழமை சனிக்கிழமை கிளம்பிட்டாரு என்று பேசினார் சீமான்.
இதுதான் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமமுக தலைவர் டிடிவி தினகரன், சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஐடி விங் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கை:
நம் இயக்கத்தின் தலைவர்கள், தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவர்கள். அவர்களை இழிவுபடுத்தும் அருகதை இங்கு யாருக்கும் கிடையாது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் சமூகநீதியின் சுடர். எளியவர்களை மேடையேற்றி அழகு பார்த்தவர். இன்று இழிசொல் பேசும் சீமான் உட்பட, அடுக்குமொழி வசனம் பேசும் பலரின் மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்தவர் அண்ணா. உங்களைப் போன்றோர் மேடை ஏறக் காரணமான தலைவர் அவர்.
தாங்கள் தலைவராக கருதும் மேதகு பிரபாகரன் அவர்களுக்கே தலைவரானவர் எங்கள் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். நீங்கள் சொல்லும் நோக்கத்திற்கு உங்களை விட பன்மடங்கு அதிகமாக செய்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். உண்மையில் பிரபாகரன் அவர்களோடு நீங்கள் பேசியிருந்தால், உங்களுக்கு அது தெரிந்திருக்கும்.
அப்படிப்பட்ட தமிழினத்தின் உண்மையான தலைவர்களை, அடித்தட்டு மக்களுக்கான திராவிட இயக்கத்தின் சமத்துவத் தலைவர்களைப் பார்த்து நீங்கள் உதிர்த்த அவதூறு வார்த்தை வெட்கக்கேடானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தரந்தாழ்ந்த பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், இதுவரைப் பெற்ற வாக்கையும் மொத்தமாக இழக்கப் போவது உறுதி என்று கூறபபட்டுள்ளது.
மறுபக்கம், தவெகவினரும் சமூக வலைதளங்களில் சீமானை கடுமையாக சாடி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
IPL 2026: நூர் அகமது அபாரம்.. கொல்கத்தாவை 32 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
தமிழ்ப் புத்தாண்டு .. பராபவத் தாய் பிறப்பெடுத்தாள் ஆண்டு அறுபதில் அவளும் ஒருதாய்!
புத்தாண்டே வருக, புன்னகையுடன் வாழ்த்திடு, ஒவ்வொருவரின் வாழ்விலும் புது பொலிவை தந்திடு!
உன் குரலில் என் இதயம் இளைப்பாறுகிறது.. அவளின் (ல்) அவன்! (9)
தமிழ்ப் புத்தாண்டில் இதைக் கற்போம்.. பூ கோர்க்கலாம் வாங்க!
Tamil New Year: முத்திரை பதிக்கப் போகும் தமிழ்ப் புத்தாண்டு.. சித்திரை மாத சிறப்புகள்!
கோவிலில் நடந்த கலாட்டா.. விஷாலின் விளையாட்டுகள் 10
சிந்தனைச் சிதறல்.. குறையை குறைவாய்க் காண்போம்.. நிறையை நிறைவாய்க் காண்போம்!
Dr Ambedkar Birth Anniversary: அறிவின் உச்சம் அம்பேத்கரின் சட்டம்!
{{comments.comment}}