பரமக்குடி: தவெக தலைவர் விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
இது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. இது ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை தான். இருவரும் சேர்ந்து பேசி இந்தப் பிரச்சனையைச் சரிசெய்து கொள்வார்கள். நான் பாமகவில் இருந்தவன்.
ரோடு ஷோ, கூட்டு ஷோ என கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. மக்களுக்காக மக்களிடம் நேரடியாகச் சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. ஆனால், விஜய் அவ்வாறு மக்களைச் சந்திக்கவில்லை. ஒரு நட்சத்திரப் பிரபலம் என்றால் வாக்குகள் மட்டும் கேட்க வருவீர்களா? இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.

2026 தேர்தலில் வாக்குகள் எண்ணப்படும் போது தான் விஜய்யின் உண்மையான செல்வாக்கு என்ன என்பது தெரியும். பாஜக கொள்கை எனக்கு எதிரி என்றால், காங்கிரஸின் கொள்கை என்ன உங்களுக்கு உடன்பாடா?. திமுக அரசியல் எதிரி என்றால், அதிமுக அரசியல் நண்பனா?
பள்ளிக் குழந்தைகளை பசியோடு பள்ளிக்கு வர வைத்தது தான் திமுக அரசின் சாதனை. இலவசங்களை கொடுத்து மக்களைக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு வந்தவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களைத் தலை நிமிர வைப்பேன் என்று கூறுவது சாதனை அல்ல, வேதனை என்று தெரிவித்துள்ளார்.
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
{{comments.comment}}