ஈரோடு: டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை என்று தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரூர் பிரச்சாரத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு கூட்டத்தில் மக்களை சந்தித்த விஜய், அதன்பின்னர் புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடந்தியிருந்தார். அதன்பின்னர் தற்பொழுது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஈரோடு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் பேசுகையில், ஈரோடு அருகே விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் சரளை என்ற இடத்தில் விஜய்யின் பிரச்சாரம் நடக்கவுள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பரளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் 18ம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு வருகிறார். காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். அரசு அதிகாரிகள் ஆலோசனைகளைக் கேட்டு இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். புதுச்சேரிக்குப் பிறகு, முதல்முறையாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த தவெகவிற்கு எந்த தடையும் இல்லை.

விஜய் தான் வரும் கால முதல்வர் என்பதை ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைய வருபவர்களை வரவேற்போம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்வார். நேற்றைய கூட்டத்தில் தவெகவில் பல பேர் இணையும் வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொன்னேன். தவெக அதிமுகவாக மாறும் என்று நான் சொல்லவில்லை. அனைவரையும் இணைப்போம், அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது தனி. இப்போது நான் முழு விருப்பத்தோடு தவெகவில் இணைந்து விட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலேயே உயர்மட்ட குழு வரையில் இருந்தவன். அதிமுகவில் எப்படி இருத்தேனோ, அதை போலவே தவெகவிலும் இருக்கிறேன். கடுமையாக உழைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.யாருடன் கூட்டணி, எந்தக் கட்சிகளை சேர்க்கலாம் என்பதை எல்லாம் விஜய் தான் முடிவு செய்வார். தற்போது தவெக பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}