டோக்கியோ: ஜப்பானில் கடுமையாக வீசி வரும் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து சேவை மற்றும் ரயில் சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு பனி குவிந்து கிடக்கிறது.

ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் அங்குள்ள ஒரு பகுதியான ஆரோமி நகரில் பனி புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 அடி அளவுக்கு சாலைகளில் பனிபடர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக ஆரோமி நகரில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், சாலைகள் மற்றும் ஆங்காங்கே உள்ள பனியை அப்புறப்படுத்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக ஜப்பான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ICC ODI ranking: ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில்.. ரோஹித் சர்மா புதிய சாதனை!
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
டெல்லியில் மீண்டும் தோல்வியடைந்த செயற்கை மழை முயற்சிகள்.. ஈரப்பதம் போதவில்லை!
ரபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.. கலாம், பிரதீபா பாட்டீல் வழியில் சாதனை
தேவகோட்டை பள்ளியில்.. கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய மாணவர்கள்!
மனிதன் மாறி விட்டான்!
பணிச்சுவை!
பைந்தமிழே பயிற்று மொழி...!
{{comments.comment}}