ஜப்பானை புரட்டிப் போட்ட பனிப்புயல்... 12 பேர் பலி.. ஆளுயரத்திற்கு குவிந்து கிடக்கும் பனி!

Feb 15, 2025,05:40 PM IST

டோக்கியோ: ஜப்பானில் கடுமையாக வீசி வரும் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


ஜப்பானில் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து சேவை மற்றும் ரயில் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. 


அதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு பனி குவிந்து கிடக்கிறது. 




ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் அங்குள்ள ஒரு பகுதியான ஆரோமி நகரில் பனி புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 அடி அளவுக்கு சாலைகளில் பனிபடர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 


மேலும், இதன்  காரணமாக ஆரோமி நகரில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், சாலைகள் மற்றும் ஆங்காங்கே உள்ள பனியை அப்புறப்படுத்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக ஜப்பான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்