டோக்கியோ: ஜப்பானில் கடுமையாக வீசி வரும் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து சேவை மற்றும் ரயில் சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு பனி குவிந்து கிடக்கிறது.

ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் அங்குள்ள ஒரு பகுதியான ஆரோமி நகரில் பனி புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 அடி அளவுக்கு சாலைகளில் பனிபடர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக ஆரோமி நகரில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், சாலைகள் மற்றும் ஆங்காங்கே உள்ள பனியை அப்புறப்படுத்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக ஜப்பான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}