ஹைதராபாத்: சானியா மிர்ஸா தனது கணவர் சோயப் மாலிக்கை 8 மாதத்திற்கு முன்பே விவாகரத்து செய்து விட்டார். சோயப் மாலிக்கின் புதிய திருமண வாழ்க்கைக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சானியாவின் தனிப்பட்ட உணர்வுகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்று அவரது தங்கை ஆனம் மிர்ஸா கூறியுள்ளார்.
சோயப் மாலிக் 3வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே விவாகரத்தான பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை அவர் மணந்துள்ளார். இந்த விவாகரம் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சானியா மிர்ஸாவின் தங்கை ஆனம் மிர்ஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், சானியா மிர்ஸா தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் பொது வெளியில் கொண்டு வந்ததில்லை. இருப்பினும் இப்போது அதுபற்றி பேசும் நிலை வந்துள்ளது. சோயப்பை அவர் 8 மாதங்களுக்கு முன்பே விவாகரத்து செய்து விட்டார். சோயப் தனது புதிய பயணத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார். மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த தருணத்தில் அவர் குறித்து யாரும் தேவையில்லாமல் ஊகம் செய்வதைத் தவிர்க்கவும், அவரது பிரைவசியை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆனம்.
சானியா மிர்ஸாவின் திருமண வாழ்க்கை கசந்தது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் பிரியும் முடிவுக்கு வந்து சில வருடங்கள் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இந்தத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவை சானியாதான் எடுத்ததாக சொல்கிறார்கள். கணவரின் போக்கை சரி செய்ய சானியா தீவிரமாக முயற்சித்ததாகவும், அது சரிப்பட்டு வராத காரணத்தால்தான் விவாகரத்து முடிவுக்கு சானியா வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இஸ்லாமிய முறைப்படி பெண்கள் திருமண வாழ்க்கை பிடிக்காமல் போகும்போது சுயேச்சையாக விவாகரத்து தர முடியும். அதை, குலா என்று சொல்கிறார்கள். அந்த முறைப்படிதான் இந்தத் திருமணத்தை சானியா மிர்ஸா முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக அவரது தந்தை நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சானியாவின் மகனுக்கு தற்போது 5 வயதாகிறது. தனது தாயாருடன்தான் மகன் இஷான் வசித்து வருகிறான். தொடர்ந்து சானியாவிடமே அவன் வளர்ந்து வருவானா, என்ன என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. சானியா மிர்ஸாவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}