லண்டன்: தொப்பை குலுங்க குலுங்க கை நிறைய பரிசுப் பொருட்களுடன் வந்து சர்ப்பிரைஸ் தரும் கிறிஸ்துமஸ் தாத்தாவைத்தான் நமக்குத் தெரியும். ஆனால் உலக நாடுகள் பலவற்றில் விதம் விதமான பழக்க வழக்கங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கடைப்பிடிக்கப்படுகின்றன. அது தெரியுமா உங்களுக்கு?
கிறிஸ்துமஸ் வந்து விட்டது. ஜிங்கிள் பெல்ஸ்களின் சத்தமும், கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் வீட்டு விஜயமும் களை கட்டியுள்ளன. இயேசு பாலகனின் பிறப்பை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் விதம் விதமான கிறிஸ்துமஸ் பழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. எல்லோருக்கும், மிட்டாய், பரிசுப் பொருட்களைத் தரும் கிறிஸ்துமஸ் தாத்தாவைத்தான் உலகம் முழுவதும் பரவலாக எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் ஆஸ்திரியா, ஜெர்மனியில் கிராம்பஸ் என்ற ஒரு உருவம் கிறிஸ்துமஸுக்கு முன்பு வலம் வரும்.

இந்த கிராம்பஸ் அப்படியே கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நேர் எதிரானவர். அதாவது சாத்தான் உருவத்துடன் கூடியவர் இந்த கிராம்பஸ். இவர் தெருக்களில் உலா வருவார். சேட்டை செய்யும் பிள்ளைகளை இவர் தண்டிப்பாராம். கிராம்பஸ் வருவார், சேட்டை பண்ணாமல் இருங்க என்று குழந்தைகளிடம் கூறுவது இந்த நாடுகளில் வழக்கமாம். கிட்டத்தட்ட நம்ம ஊர் பூச்சாண்டி போலத்தான் இந்த கிராம்பஸும்.
ஸ்வீடன் நாட்டின் காவலே என்ற நகரில் கடந்த 1966ம் ஆண்டு முதல் ஒரு பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அதாவது வைக்கோலில் ஒரு பெரிய ஆட்டை உருவாக்கி அதை ஊரின் முக்கியப் பகுதியில் நிறுவுவார்கள். இதை கிறிஸ்துமஸுக்கு முன்பு சிலர் தீவைத்து எரிப்பார்கள். ஆனால் அந்த வைக்கோல் ஆட்டைப் பாதுகாக்க போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள். கிறிஸ்துமஸ் முடிந்ததும் இந்த ஆடு அகற்றப்படுமாம்.
ஜப்பானில் கிறிஸ்துமஸை மத விழாவாக் கொண்டாடுவதில்லை. மாறாக குடும்பத்தினருடன் கூடி கென்டகி பிரை சி்கன் விழாவாக கொண்டாடுகின்றனர். 70களில் கேஎப்சி இந்த நாட்டுக்கு வருகை தந்ததை கொண்டாடும் வகையில் இந்த கென்டகி பிரைட் கிறிஸ்துமஸ் அங்கு கொண்டாடப்படுகிறதாம். பெரும்பாலான வீடுகளில் அன்று கென்டகி பிரைட் சிக்கன் சாப்பிடுவது வழக்கமாம்.
அமெரிக்காவில் வீடுகளில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரங்களில் பிக்கிள் வடிவிலான ஒரு ஆபரணத்தை மறைத்து வைப்பார்கள். அதைக் கண்டுபிடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு பரிசு தருவார்களாம். குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் விளையாட்டு இது.

வென்சூலா நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில், மக்கள் ரோலர் ஸ்கேட்டர் மூலமாக சர்ச்சுக்குச் செல்வார்களாம். இதற்காகவே சர்ச் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும். ரோலர் ஸ்கேட்டர்களுக்கு வசதியாக இந்த ஏற்பாடாம். அதிகாலையிலேயே ரோலர் ஸ்கேட்டரில் மக்கள் சர்ச்சுக்குச் செல்வது பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்.
இப்படி உலகம் முழுவதும் விதம் விதமாக கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். மத விழாக்கள் அனைத்தும் கடவுளுக்காக மட்டுமல்ல.. நமது மகிழ்ச்சிக்காகவும்தானே.. நாமும் இணைந்து கொண்டாடி மகிழ்வோம்!
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}