வானம் அருளும் மழைத்துளியே!

Nov 19, 2025,11:08 AM IST

- ஞா.சொர்ணதீபம்


பூமி பசுமை போர்த்திடுமே

பூவுலக  வாழ்வு உயர்ந்திடுமே,

பறவைகள் பாடி பறந்திடுமே

விலங்குகள்  யாவும் மகிழ்ந்திடுமே




விவசாயம் வளமாய் பெருகிடுமே

விவசாயி வாழ்வும் உயர்ந்திடுமே

விளைபொருள் பொங்கிப் பெருகிடுமே

மானிடர் வயிறு நிறைந்திடுமே 


வானம் அருளும் மழைத்துளியே

விண்ணின் பரிசாய்  வந்திடவே

மண்ணின் மகிழ்ச்சி  நிறைந்திடவே

உலகம்  செழிக்க 

செய்திடுமே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்