எனது 50 ஆண்டுகால கனவு நிறைவேறியது.. சுவாமியே சரணம் ஐயப்பா.. சௌமியா அன்புமணி நெகழ்ச்சி!

Mar 18, 2025,09:39 PM IST

திருவனந்தபுரம்: சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது என பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 


கேரளாவில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில்  மாலை அணிந்து இருமுடி கட்டி ஒரு மண்டலம் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.அதன்படி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே சுவாமி ஐயப்பனை தரிசிக்க மாலை அணிவித்து விரதம் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாரை சாரையாக சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். அதே சமயத்தில் முக்கிய தமிழ் மாத தொடக்கத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.


இதனைக் காணவும் ஏராளமான பக்தர்கள் சுவாமி ஐயப்பனின் தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்கள் மட்டுமே தரிசித்து வரும் கன்னி சாமியாக இருக்கும் இத்தல இறைவனை பத்து வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே  தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்ட கன்னிப் பெண்களுக்கும் அனுமதி அளிப்பதில்லை.




இதனால் பொதுவாக வாழ்வில்  ஒரு தடவையாவது ஐயப்பன் முகத்தை  தரிசிக்க மாட்டோமா.. இந்த வாய்ப்பு கிடைக்காதா என ஆவலுடன் ஏங்கும் பெண்கள் அதிகம்.அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியான, பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி என் 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது.. சாமியே சரணம் ஐயப்பா.. என நெகழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 


இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கூறியதாவது:  சபரிமலையில் பதினெட்டாம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது எனது சிறிய வயது கனவு. என்50 ஆண்டுகால வேண்டுதல் தற்போது நிறைவேறியது. சாமியே சரணம் ஐயப்பா.. என பதிவிட்டு, அவர் பதினெட்டாம் படி வந்து உணர்ச்சிபூர்வமாக கண்கலங்கி அழும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 




அந்த வீடியோவில் சௌமியா அன்புமணி மாலை அணிந்து, கருப்பு உடை அணிந்து தலையில் இருமுடி சுமந்தபடி சாமி ஐயப்பனை தரிசிக்க பாதயாத்திரை சென்றுள்ளார். இறுதியாக மலையில் ஏறி பதினெட்டாம் படி அடிவாரத்தில் வந்த உடனையே நல்லபடியாக ஐயனை தரிசிக்க வந்து விட்டோம் என எண்ணி உணர்ச்சிபூர்வமாக கண்கலங்கி கதறி அழுக ஆரம்பித்து விட்டார். பின்னர்  இருமுடி சுமந்து கொண்டே சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் முழங்க 18 படிகளில் ஏறினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


 இந்த வீடியோ தற்போது பார்ப்போரையும் மனம் நெகிழச் செய்து கண் கலங்க வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

news

அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!

news

அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?

news

ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!

news

அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?

news

காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!

news

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்

news

என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!

news

Vijay Rupani: விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்