சென்னை: சென்னை போலீஸார் கொடுத்த சம்மனை வாங்க மறுத்து விட்டு நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் பிராமணர்கள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்துக் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு தெலுங்கு சங்கங்கள் சார்பில் போலீஸில் புகாரும் தரப்பட்டது. சென்னையிலும் நான்கு பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை கஸ்தூரிக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் சம்மனைப் பெறவில்லை. அவரது வீட்டும் பூட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது செல்போனும் ஆனில் இல்லையாம். அதுவும் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகை கஸ்தூரி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவர் சென்னையில் வேறு எங்காவது தங்கியுள்ளாரா அல்லது ஆந்திரா போயுள்ளாரா என்றும் தெரியவில்லை.
கஸ்தூரியைக் கண்டுபிடிக்கவும், அவரிடம் சம்மனை வழங்கி விசாரணை நடத்தவும் சென்னை போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. மறுபக்கம் தான் கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகளைத் தவிர்க்க முன்ஜாமின் கோரி கோர்ட்டை கஸ்தூரி அணுகுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்
{{comments.comment}}