சென்னை: சென்னை போலீஸார் கொடுத்த சம்மனை வாங்க மறுத்து விட்டு நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் பிராமணர்கள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்துக் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு தெலுங்கு சங்கங்கள் சார்பில் போலீஸில் புகாரும் தரப்பட்டது. சென்னையிலும் நான்கு பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை கஸ்தூரிக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் சம்மனைப் பெறவில்லை. அவரது வீட்டும் பூட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது செல்போனும் ஆனில் இல்லையாம். அதுவும் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகை கஸ்தூரி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவர் சென்னையில் வேறு எங்காவது தங்கியுள்ளாரா அல்லது ஆந்திரா போயுள்ளாரா என்றும் தெரியவில்லை.
கஸ்தூரியைக் கண்டுபிடிக்கவும், அவரிடம் சம்மனை வழங்கி விசாரணை நடத்தவும் சென்னை போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. மறுபக்கம் தான் கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகளைத் தவிர்க்க முன்ஜாமின் கோரி கோர்ட்டை கஸ்தூரி அணுகுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}