நடிகை கஸ்தூரி எங்கே?.. தலைமறைவானதாக பரபரப்பு.. சம்மனை வழங்க முடியாமல் தவிக்கும் போலீஸ்

Nov 10, 2024,04:47 PM IST

சென்னை:  சென்னை போலீஸார் கொடுத்த சம்மனை வாங்க மறுத்து விட்டு நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.


சென்னையில் சமீபத்தில் பிராமணர்கள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்துக் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு தெலுங்கு சங்கங்கள் சார்பில் போலீஸில் புகாரும் தரப்பட்டது. சென்னையிலும் நான்கு பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.




இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை கஸ்தூரிக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் சம்மனைப் பெறவில்லை. அவரது வீட்டும் பூட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  அவரது செல்போனும் ஆனில் இல்லையாம். அதுவும் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகை கஸ்தூரி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவர் சென்னையில் வேறு எங்காவது தங்கியுள்ளாரா அல்லது ஆந்திரா போயுள்ளாரா என்றும் தெரியவில்லை. 


கஸ்தூரியைக் கண்டுபிடிக்கவும், அவரிடம் சம்மனை வழங்கி விசாரணை நடத்தவும் சென்னை போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. மறுபக்கம் தான் கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகளைத் தவிர்க்க முன்ஜாமின் கோரி கோர்ட்டை கஸ்தூரி அணுகுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்