நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.. நவம்பர் 29ம் தேதி வரை சிறையில் இருப்பார்!

Nov 17, 2024,05:18 PM IST

சென்னை:  ஹைதராபாத்தில் தலைமறைவாக பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவரை சென்னைக்கு தனிப்படை போலீஸார் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நவம்பர் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


சென்னையில் நடந்த பிராமண சமுதாயத்தினர் பங்கேற்ற போராட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவர் மீது சென்னை, மதுரை, கோவையில் தெலுங்கு சங்கங்கள் சார்பில் புகார்கள் தரப்பட்டன. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.




இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகியபோது முன்ஜாமின் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த கஸ்தூரியைக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டினர். இந்தப் பின்னணியில் ஹைதராபாத்தில் ஒரு தயாரிப்பாளரின் வீட்டில் கஸ்தூரி அடைக்கலம் புகுந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை எழும்பூர் போலீஸார் அங்கு விரைந்து சென்று நேற்று கஸ்தூரியைக் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து முதலில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் எழும்பூர் நீதிமன்ற, நீதித்துறை நடுவர் ரகுபதி ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.  விசாரணைக்குப் பின்னர் கஸ்தூரியை நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதிமுக.,வின் 4 தொகுதிகளிலும் உதயசூரியன்...திடீரென முடிவை மாற்றிய வைகோ

news

ஈரான் போர் முடிவுக்கு வருதா? விரைவில் வெளியேறப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது Oracle நிறுவனம்

news

TVK Vijay Campaign: விஜய்யின் பிரச்சார தேதியில் திடீர் மாற்றம்...காரணம் இது தானா?

news

Puducherry election 2026 என்னது வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்ய போகிறாரா விஜய்?

news

சசிகலா கட்சியில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்...உசிலம்பட்டி வேட்பாளராக அறிவிப்பு

news

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாயராவை தொடர்ந்து ஷெல் நிறுவனம் அதிரடி

news

மணிமாவின் April 1.. நீங்கள் ஏமாற்றப் போகிறீர்களா.. அல்லது ஏமாறப் போகிறீர்களா?

news

மாடித் தோட்ட அலப்பறைகள்.. அவ்வப்போது மொக்கை வாங்கினாலும்.. மொட்டுக்கள் மலரும்போது.. ஆஹா!

அதிகம் பார்க்கும் செய்திகள்