நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.. நவம்பர் 29ம் தேதி வரை சிறையில் இருப்பார்!

Nov 17, 2024,05:18 PM IST

சென்னை:  ஹைதராபாத்தில் தலைமறைவாக பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவரை சென்னைக்கு தனிப்படை போலீஸார் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நவம்பர் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


சென்னையில் நடந்த பிராமண சமுதாயத்தினர் பங்கேற்ற போராட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவர் மீது சென்னை, மதுரை, கோவையில் தெலுங்கு சங்கங்கள் சார்பில் புகார்கள் தரப்பட்டன. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.




இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகியபோது முன்ஜாமின் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த கஸ்தூரியைக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டினர். இந்தப் பின்னணியில் ஹைதராபாத்தில் ஒரு தயாரிப்பாளரின் வீட்டில் கஸ்தூரி அடைக்கலம் புகுந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை எழும்பூர் போலீஸார் அங்கு விரைந்து சென்று நேற்று கஸ்தூரியைக் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து முதலில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் எழும்பூர் நீதிமன்ற, நீதித்துறை நடுவர் ரகுபதி ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.  விசாரணைக்குப் பின்னர் கஸ்தூரியை நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!

news

மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

news

துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்

news

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்