பசும்பொன் : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இருக்கும் அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையரும் பசும்பொன்னிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றார்.
ஸ்ரீதர் வாண்டையர் அஞ்சலி செலுத்த சென்ற போது அங்கிருந்த பூசாரிகளுக்கும் ஸ்ரீதர் வாண்டையாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் வாண்டையர் அங்கிருந்த பூசாரி ஒருவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஸ்ரீதர் வாண்டையார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றும், அவர் அங்கிருந்து எழுந்து செல்ல மறுத்து விட்டார்.

அந்த நேரமாகப் பார்த்து தேவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் ஸ்ரீதர் வாண்டையர் மற்றும் பூசாரிகள் தரப்பு இடையே நடந்த மோதலைக் கேள்விப்பட்டு, சமரசம் பேசி, ஸ்ரீதர் வாண்டையரை சமாதானம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஸ்ரீதர் வாண்டையரின் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஸ்ரீதர் வாண்டையரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆரம்பத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது. பிறகு அங்கிருந்து விலகி, கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது இந்தியா கூட்டணியில் இணைந்து, அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!
பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்.. தெற்கு திசை நோக்கிய ஆலயம்!
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை
{{comments.comment}}