பசும்பொன்னில் பூசாரியுடன் மோதல்.. ஸ்ரீதர் வாண்டையர் தர்ணா.. சமாதானப்படுத்திய செங்கோட்டையன்

Oct 30, 2025,05:19 PM IST

பசும்பொன் : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இருக்கும் அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையரும் பசும்பொன்னிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றார்.


ஸ்ரீதர் வாண்டையர் அஞ்சலி செலுத்த சென்ற போது அங்கிருந்த பூசாரிகளுக்கும் ஸ்ரீதர் வாண்டையாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் வாண்டையர் அங்கிருந்த பூசாரி ஒருவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஸ்ரீதர் வாண்டையார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றும், அவர் அங்கிருந்து எழுந்து செல்ல மறுத்து விட்டார்.




அந்த நேரமாகப் பார்த்து தேவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் ஸ்ரீதர் வாண்டையர் மற்றும் பூசாரிகள் தரப்பு இடையே நடந்த மோதலைக் கேள்விப்பட்டு, சமரசம் பேசி, ஸ்ரீதர் வாண்டையரை சமாதானம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஸ்ரீதர் வாண்டையரின் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 


ஸ்ரீதர் வாண்டையரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆரம்பத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது. பிறகு அங்கிருந்து விலகி, கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது இந்தியா கூட்டணியில் இணைந்து, அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தைப் பூசத் தலைவன் !

news

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?

news

புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு

news

தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?

news

அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

news

யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி

news

ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை

news

கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி

news

வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?

அதிகம் பார்க்கும் செய்திகள்