சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் பிறந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரது பெயரை வைக்க உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய 18 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதற்கு பிறகு விவசாய தொழிலாளர்கள், இந்திய பொதுவுடைமை சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களின் தலைவராக இருந்துள்ளார். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் பல சேவைகளை ஆற்றிய இவர் தமிழக அரசின் அம்பேத்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். அம்பேத்கர் விருதுடன் வழங்கப்பட்ட ரூ. ஒரு லட்சம் ரொக்க பணத்தில் பாதியை கட்சிக்கும், மீதமுள்ள தொகையை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் அளித்தவர் நல்லகண்ணு.

நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவிற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், திருவள்ளுவர் சிலை ஒன்றையும் அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். பிறகு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுவுடைமை இயக்கத்திற்கு மட்டுமின்றி நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. தோழர் நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெற வந்தேன்.
திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கூடிய திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் ஐயா நல்லகண்ணு. எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என அவரை கேட்டுக் கொள்கிறேன். அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்டப்படும். அந்த மருத்துவமனையும் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}