Operation Kaveri: சூடானில் உச்சகட்டத்தை எட்டிய போர்.. 500 இந்தியர்கள் மீட்பு

Apr 25, 2023,09:23 AM IST

கார்ட்டூம் : சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் இந்திய அரசின் முயற்சியால் சூடானில் சிக்கி இருந்த 500 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ரம்ஜான் காரணமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் தொடர்ந்து ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே அங்கு சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 413 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.



உள்நாட்டுப் போர் வெறித்தனமாக இருப்பதால் சூடான் போர்க்களமாகியுள்ளது.இதனால் உயிர் பயம் காரணமாக அந்நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். ராணுவம் - துணை ராணுவம் இடையேயான போரால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3500 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

தாக்குதலில் ஈடுபடுவோர் அப்பாவி மக்கள் என்றும் பாராமல் மோசமான முறையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் அங்கு சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.

உள்நாட்டு போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு இந்தியர்கள் பெருமளவில் சிக்கித் தவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து சூடானில் சிக்கி உள்ள 3500 இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ஆப்பரேஷன் காவிரி என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 500 இந்தியர்கள் மீட்கப்பட்டு, சூடான் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இங்கிருந்து கப்பல் மூலம் அவர்கள் இந்தியா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மீதமுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்