சென்னை: ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெரும் கட்சி தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய நாட்டை ஆளப்போகிறது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்துள்ள அறிக்கையில், 18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதி தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான(2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}