சென்னை: ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெரும் கட்சி தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய நாட்டை ஆளப்போகிறது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்துள்ள அறிக்கையில், 18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதி தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான(2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}