சென்னை: ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெரும் கட்சி தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய நாட்டை ஆளப்போகிறது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்துள்ள அறிக்கையில், 18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதி தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான(2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}