டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் துணை நிற்கிறது. அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைக்க முடியாது என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக நடந்த பொதுக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி சுனிதா கெஜ்ரிவால், திருச்சி சிவா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டு பேசினர். அனைவருமே பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்று ஒரே குரலில் கோரிக்கை வைத்துப் பேசினர்.
இந்த கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவாலின் பேச்சில் ஆக்ரோஷம் தெறித்தது. நாட்டு மக்களுக்கு கெஜ்ரிவால் அளித்துள்ள 6 உத்தரவாதங்களையும் இக்கூட்டத்தில் தெரிவித்தார் சுனிதா கெஜ்ரிவால். அவரது பேச்சிலிருந்து சில:
இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் துணை நிற்கிறார்கள். அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைக்க முடியாது. உஙகளிடமிருந்து நான் ஓட்டு கேட்கவில்லை. தேர்தலில் இவரை தோற்கடியுங்கள், அவரைத் தோற்கடியுங்கள் என்று கூட கேட்கவில்லை. மாறாக 140 கோடி இந்தியர்களும் இந்த நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்ல உதவுங்கள் என்றுதான் கோருகிறேன். இது எனது கணவர் சிறையிலிருந்து அனுப்பியுள்ள கோரிக்கையாகும்.
இந்த கூட்டணியின் பெயரில் மட்டும் இந்தியா இல்லை. மாறாக, இதயத்திலும் இந்தியாவாக உள்ள கூட்டணி இது. கெஜ்ரிவால் 6 உத்தரவாதங்களைத் தெரிவித்துள்ளார். அதை இங்கே வாசிக்கிறேன்.
1. நாடு முழுவதும் மின்வெட்டே இல்லாத நிலையை உருவாக்குவோம். 2. நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். 3. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடம் அமைக்கப்படும். அங்கு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் தரமான இலவசக் கல்வி அளிக்கப்படும். 4. ஒவ்வொரு கிராமத்திலும் மொகல்லா கிளினிக் அமைக்கப்படும். அதேபோல ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் அரசு சார்பில் நவீன மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும். 5. விவசாயிகளுக்கு சிறந்த குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்படும். 6. டெல்லி மக்களுக்கு நீண்ட காலமாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது சரி செய்யப்படும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இந்த உத்தரவாதங்களையெல்லாம் ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவோம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் என்று சுனிதா கெஜ்ரிவால் பேசினார்.
கல்பனா சோரன் ஆவேசம்
இந்த கூட்டத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டார். ஹேமந்த் சோரனும், கெஜ்ரிவாலைப் போலவே அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் கல்பனா சோரன் பேசும்போது, இந்த நாட்டின்50 சதவீத பெண்களின் சார்பாகவும், 9 சதவீத பழங்குடியின மக்கள் சார்பாகவும் இங்கு வந்துள்ளேன். இந்த போராட்டம் வரலாற்றில் இடம் பிடிக்கும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு அனைவரும் வந்துள்ளோம். நாம் அனைவரும் இங்கு திரண்டிருக்க ஒரே காரணம், சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான் என்று ஆவேசமாக பேசினார் கல்பனா சோரன்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}