டெல்லி: விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் செய்துள்ளது.
மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. கண்மூடித்தனமாக ஒரு நடைமுறை மீது குற்றம் சாட்டுவது பல்வேறு சந்தேகங்களுக்கே வழி வகுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை டிஸ்மிஸ் செய்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:
- ஒரு நடைமுறை மீது கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுவது, சந்தேகப்படுவது சரியான நடைமுறையாக இருக்காது. அது பல சந்தேகங்களுக்கே வழி வகுக்கும்.
- நீதித்துறையாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றம் சட்டசபையாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமான விமர்சனம் தேவைதான். ஆனால் சமூகத்தின் அனைத்துத் தூண்களையும் சரிசமமாக நம்ப வேண்டும். நம்பிக்கை ஒத்துழைப்பின் மூலம் நாம் அனைத்துத் தூண்களையும் பாதுகாக்க முடியும்.
- உரிய தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் மூலம் நாங்கள் இந்தத் தீர்ப்பை அளிக்கிறோம்.
- சின்னம் பொருத்தும் எந்திரங்களையும், வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் சேர்த்துப் பாதுகாக்க வேண்டும்.
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 45 நாட்களுக்குப் பாதுகாத்து வைக்க வேண்டும்.
- தேர்தல் முடிவில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திந் மைக்ரோ கன்ட்ரோலரை உரிய பொறியாளர்கள் மூலம், முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் பரிசோதிக்கலாம். இதற்கு ஆகும் செலவை, சம்பந்தப்பட்ட வேட்பாளரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- விவிபாட் ஸ்லிப்புகளை எண்ணுவதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.
- கட்சிகளின் சின்னங்களுக்குப் பார்கோடு பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}