விவிபாட் வாக்குகளை முழுமையாக எண்ணக் கோரிய.. அத்தனை மனுக்களும் டிஸ்மிஸ் - சுப்ரீம் கோர்ட்

Apr 26, 2024,12:57 PM IST

டெல்லி:  விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று  கோரி தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் செய்துள்ளது. 


மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. கண்மூடித்தனமாக ஒரு நடைமுறை மீது குற்றம் சாட்டுவது பல்வேறு சந்தேகங்களுக்கே வழி வகுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.




பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை டிஸ்மிஸ் செய்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:


- ஒரு நடைமுறை மீது கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுவது, சந்தேகப்படுவது சரியான நடைமுறையாக இருக்காது. அது பல சந்தேகங்களுக்கே வழி வகுக்கும்.


- நீதித்துறையாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றம் சட்டசபையாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமான விமர்சனம் தேவைதான். ஆனால் சமூகத்தின் அனைத்துத் தூண்களையும் சரிசமமாக நம்ப வேண்டும். நம்பிக்கை ஒத்துழைப்பின் மூலம் நாம் அனைத்துத் தூண்களையும் பாதுகாக்க முடியும்.


- உரிய தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் மூலம் நாங்கள் இந்தத் தீர்ப்பை அளிக்கிறோம்.


- சின்னம் பொருத்தும் எந்திரங்களையும், வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் சேர்த்துப் பாதுகாக்க வேண்டும். 


- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 45 நாட்களுக்குப் பாதுகாத்து வைக்க வேண்டும்.


- தேர்தல் முடிவில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திந் மைக்ரோ கன்ட்ரோலரை உரிய பொறியாளர்கள் மூலம், முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் பரிசோதிக்கலாம். இதற்கு ஆகும் செலவை, சம்பந்தப்பட்ட வேட்பாளரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.


- விவிபாட்  ஸ்லிப்புகளை எண்ணுவதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.


- கட்சிகளின் சின்னங்களுக்குப் பார்கோடு பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்