அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடு.. சுவாமிமலை முருகன் கோவில்!

Feb 24, 2026,12:04 PM IST

- தி. மீரா


தமிழகத்தின் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள சுவாமிமலை முருகன் கோவில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின் புகழ்பெற்ற திருத்தலமாகும். இது ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாக கருதப்படுகிறது. இத்தலம் ஆன்மீக வரலாறும், புராண மகத்துவமும் கொண்ட புனித ஸ்தலமாக விளங்குகிறது.


ஒரு காலத்தில் பிரம்மா உலகப் படைப்பின் ரகசியத்தை சரியாக விளக்க முடியாமல் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் முருகப்பெருமான் அவரைத் தண்டித்து சிறையில் அடைத்தார். இதனால் உலகில் படைப்பு நிற்க, சிவபெருமான் காரணம் அறிய வந்தார்.


அப்போது முருகன், சிவபெருமானுக்கே “பிரணவ மந்திரம் – ஓம்” என்பதன் அர்த்தத்தை உபதேசம் செய்தார். தந்தைக்கே குருவாக நின்றதால், இத்தலத்தில் முருகன் “சுவாமிநாதன்” (சுவாமிக்கு நாதன் – குரு) என்று அழைக்கப்படுகிறார். இதுவே இத்தலத்தின் சிறப்பான வரலாறாகும்


.


சுவாமிமலை கோவில் ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது. சுமார் 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும் (தமிழ் ஆண்டுகளின் 60 ஆண்டுகளை குறிக்கும் என கூறப்படுகிறது).


மலையின் அடிவாரத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி அம்மன் சன்னதிகள் உள்ளன. மேலே முருகப்பெருமான் சுவாமிநாதராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகன் சிறுவனாகவும், குருவாகவும் அருள் தருகிறார் என்பது தனிச்சிறப்பு. 


ஆறுபடை வீடுகளில் ஞானத்தை வழங்கும் தலம். கல்வி, அறிவு, தேர்ச்சி வேண்டி பலர் வழிபடுகின்றனர். குழந்தைகள் கல்வி தொடங்கும் முன் “அக்ஷராப்யாசம்” செய்யும் வழக்கம் உள்ளது. கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் மிகுந்த விமர்சையாக நடைபெறுகின்றன.


சுவாமிமலை என்பது “குருவின் தலம்” என்று போற்றப்படுகிறது. தந்தைக்கே குருவாக நின்ற முருகன், ஞானத்தின் வடிவமாக விளங்குகிறார். இங்கு வழிபடுவோருக்கு அறிவு, தெளிவு, மன அமைதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


சுவாமிமலை முருகன் கோவில், புராண வரலாறும் ஆன்மீக பெருமையும் கொண்ட புனித தலம் ஆகும். “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை உலகிற்கு உணர்த்திய தெய்வீக நிலம் இதுவாகும். கல்வி, ஞானம், முன்னேற்றம் வேண்டி பக்தர்கள் திரளாக தரிசனம் செய்கிறார்கள். 


“சுவாமிநாதன் திருவருளால் ஞானம் பெருகட்டும்.”


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்