சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் உத்தி வகுப்புப் பணிக்காக ஆதவ் அர்ஜூனாவின் Voice of commons தனியார் நிறுவனத்துடன், தமிழக வெற்றிக் கழகம் கட்சி, ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் கட்சியினுடைய பொதுச் செயலாளராக இருக்க கூடிய புஸ்ஸி ஆனந்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். புஸ்ஸி ஆனந்த தவெகவை முடக்க உள்ளதாகவும் பேசியிருந்தார். இந்த நிலை நீடித்தால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெகவின் நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் ஆர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் விஜய்யின் தவெக கட்சி ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜூனாவை விஜய் சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஜான் ஆரோக்கியசாமியுடன் தவெக செய்துள்ள ஒப்பந்தம் முடிவுக்கு வருமா? அல்லது ஆதவ் ஆர்ஜூனாவுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தல் கள வேலைகள் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த சூழலில் தான் இன்று மாலை ஆதவ் அர்ஜூனாவுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஜான் ஆரோக்கியசாமிதான் ஆரம்பத்திலிருந்து விஜய்க்கு வழிகாட்டி வருகிறார். அதேசமயம், திமுக, அதிமுகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை தவெகவில் சேர்க்க அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்ட நிலையில் அவருடன் தொடர்ந்தால் சரிப்பட்டு வராது என்ற எண்ணத்துக்கு விஜய் வந்துள்ளதாக சொல்கிறார்கள். எதுவும் அதிகாரப்பூர்வாக தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}