திருநெல்வேலி: கரூர் செல்ல விஜய் தயக்கம் காட்டுவதற்கு, அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பிய பிறகு வெளியில் எங்கும் செல்லாமல் இருக்கிறார். வீட்டில் இருந்தபடியே சட்ட ரீதியான ஆலோசனைகளை நடத்தி வருகிறார். தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். விரைவில் கரூர் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வெளியில் வராமல் இருப்பதையும் அவரது எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் விஜய்யைப் பாதித்திருக்கிறது. சதி வேலை என்று அவர் கருதுகிறார். இப்போது நாம் போனால் நம்மையும் கூட ஏதாவது செய்து விடலாம் என்று அவர் நினைக்கலாம். தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் கூட விஜய் கருதலாம். இதனால்தான் அவர் போகாமல் இருக்கலாம் என்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், விஜய்யும் தொலைபேசியில் பேசியதாக செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவர்கள் பேசியிருக்கலாம் என்று பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}