இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகள்.. தமிழ்நாடு சாதனை!

Apr 07, 2023,12:30 PM IST
சென்னை:   இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நாட்டிலேயே அதிக அளவிலான தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக கர்நாடகா விளங்குகிறது.

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன்படி  2014ம் ஆண்டு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்து தற்போது 654 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கர்நாடகத்தில் அதிக அளவிலான தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.



அரசு மருத்துவக் கல்லூரிகள் 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 34 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. 2வது இடத்தில் 30 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் மகாராஷ்டிரா உள்ளது. மேற்கு வங்காளத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கர்நாடகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  குஜராத்திலும் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.  ராஜஸ்தானில் 21, மத்தியப் பிரதேசத்தில் 14, பீகாரில் 12 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகள்

கர்நாடகத்தில் 44 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாட்டிலேயே இங்குதான் அதிகஅளவிலான தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் தலா 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தெலங்கானாவில் 27, கேரளாவில் 21 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  மகாராஷ்டிராவில் 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

புதுச்சேரியில் 2 அரசு மருத்துவக் கல்லூரிகளே உள்ள நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்