ஆகவே மக்களே, செப்டம்பர்  22 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை.. என்ன மேட்டர் தெரியுமா?

Aug 28, 2023,01:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 22ம் தேதி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ம் தேதி வரை இந்த விடுமுறை நீடிக்கும்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது காலாண்டுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அதாவது 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன. அதேபோல 6ம் வகுப்பு முதல்  10ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு செப்டம்பர் 18ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.



பிளஸ் 1 மற்றும் பிளஸ்டூ மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடக்கும். இதைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறைகள் தொடங்கும். 1ம் வகுப்பு முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை விடப்படும். 4 டூ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம்  தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும்.

காந்தி ஜெயந்தியுடன் காலாண்டு விடுமுறை முடிவுக்கு வந்து அக்டோபர் 3ம் தேதியிலிருந்து பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?

news

7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு

news

நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

news

தட்டுப்பாடின்றி சமையல் சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு: நிர்மலா சீதாராமன் உறுதி

news

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி 60% இருக்கைகளுக்கு கட்டணம் கிடையாது

news

வடகொரியா தேர்தல்: எதிர்ப்புக்களை மீறி கிம் ஜாங் உன் வெற்றி

news

ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்