சென்னை: டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் சில முரண்பாடுகள் உள்ளதாக ஒரு ஆசிரியை நம்மிடம் குமுறியுள்ளார். அவரது குமுறலும் நியாயமாகத்தான் இருக்கிறது. அப்படி என்னதான் முரண்பாடுகள் உள்ளன.. அந்த சோகத்தை நீங்களே படிச்சுப் பாருங்க.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக படித்தவர்களுக்கு முதன்மை பாடத்தில் 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் .
ஆனால் சமூக அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக படித்தவர்களுக்கு மட்டும் முதன்மை பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள். அதாவது மற்ற பாடங்களை விட சமூக அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு மட்டுமே தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது... கடந்த ஆண்டுகள் ஆசிரியர் தகுதி தேர்வு _ தேர்ச்சி விகிதங்கள் இதற்கு சான்று.
ஏன் இந்த பாரபட்சம்...

இதே மதிப்பெண் முறையை ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்விலும் பின்பற்றினால் சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வெற்றி வாய்ப்புகள் அதிகம்.. பாதிக்கப்படுவது தமிழ், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமே...
இந்த முறையை முற்றிலும் உடனடியாக மாற்ற வேண்டும்.. வெற்றி வாய்ப்புகள் அனைத்து பாடப்பிரிவிற்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்..
அனைவரும் எழுத வேண்டிய பொதுப்பகுதி
1.தமிழ் 30 மதிப்பெண்
2.ஆங்கிலம் 30 மதிப்பெண்
3.உளவியல் 30 மதிப்பெண்
90 மதிப்பெண் வினாக்கள் (பொதுபிரிவு)
கணிதம் & அறிவியல் பாடங்களை முதன்மை பாடமாக எடுத்தவர்கள்.
1.கணிதம் - 30மதிப்பெண்
2.அறிவியல் 30மதிப்பெண்
தமிழ் & ஆங்கிலம் - பாடங்களை முதன்மை பாடமாக எடுத்தவர்கள்
1.சமூக அறிவியல் _ 60 மதிப்பெண்
சமூக அறிவியல் _ முதன்மை பாடமாக எடுத்தவர்கள்
1. சமூக அறிவியல் 60மதிப்பெண்...
இந்த முறைமை சரியா? மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் அனைத்து பாடப்பிரிவிற்கும் ஏன் சமமாக வழங்கப்படவில்லை...
மாற்றம் தேவை:
1. சமூக அறிவியல் போன்றே அனைத்து முதன்மை பாடத்திற்கு மதிப்பெண் 60
2. அல்லது சமூக அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு 30 மதிப்பெண் என அனைத்து பாடம் படித்தவர்களுக்கு உள்ளது போல் மதிப்பெண் குறைப்பது
இந்த மாற்றம் இல்லையேல் கல்வியில் சம உரிமை இல்லை என்று தான் அர்த்தம்...
உரியவர்கள் இதைப் பார்த்து மாற்றத்தைக் கொண்டு வந்தால் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களும் அகமகிழ்வார்கள்.. செய்வார்களா.. அவர்கள் செய்வார்களா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!
தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!
ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!
{{comments.comment}}