சென்னை: டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் சில முரண்பாடுகள் உள்ளதாக ஒரு ஆசிரியை நம்மிடம் குமுறியுள்ளார். அவரது குமுறலும் நியாயமாகத்தான் இருக்கிறது. அப்படி என்னதான் முரண்பாடுகள் உள்ளன.. அந்த சோகத்தை நீங்களே படிச்சுப் பாருங்க.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக படித்தவர்களுக்கு முதன்மை பாடத்தில் 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் .
ஆனால் சமூக அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக படித்தவர்களுக்கு மட்டும் முதன்மை பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள். அதாவது மற்ற பாடங்களை விட சமூக அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு மட்டுமே தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது... கடந்த ஆண்டுகள் ஆசிரியர் தகுதி தேர்வு _ தேர்ச்சி விகிதங்கள் இதற்கு சான்று.
ஏன் இந்த பாரபட்சம்...

இதே மதிப்பெண் முறையை ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்விலும் பின்பற்றினால் சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வெற்றி வாய்ப்புகள் அதிகம்.. பாதிக்கப்படுவது தமிழ், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமே...
இந்த முறையை முற்றிலும் உடனடியாக மாற்ற வேண்டும்.. வெற்றி வாய்ப்புகள் அனைத்து பாடப்பிரிவிற்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்..
அனைவரும் எழுத வேண்டிய பொதுப்பகுதி
1.தமிழ் 30 மதிப்பெண்
2.ஆங்கிலம் 30 மதிப்பெண்
3.உளவியல் 30 மதிப்பெண்
90 மதிப்பெண் வினாக்கள் (பொதுபிரிவு)
கணிதம் & அறிவியல் பாடங்களை முதன்மை பாடமாக எடுத்தவர்கள்.
1.கணிதம் - 30மதிப்பெண்
2.அறிவியல் 30மதிப்பெண்
தமிழ் & ஆங்கிலம் - பாடங்களை முதன்மை பாடமாக எடுத்தவர்கள்
1.சமூக அறிவியல் _ 60 மதிப்பெண்
சமூக அறிவியல் _ முதன்மை பாடமாக எடுத்தவர்கள்
1. சமூக அறிவியல் 60மதிப்பெண்...
இந்த முறைமை சரியா? மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் அனைத்து பாடப்பிரிவிற்கும் ஏன் சமமாக வழங்கப்படவில்லை...
மாற்றம் தேவை:
1. சமூக அறிவியல் போன்றே அனைத்து முதன்மை பாடத்திற்கு மதிப்பெண் 60
2. அல்லது சமூக அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு 30 மதிப்பெண் என அனைத்து பாடம் படித்தவர்களுக்கு உள்ளது போல் மதிப்பெண் குறைப்பது
இந்த மாற்றம் இல்லையேல் கல்வியில் சம உரிமை இல்லை என்று தான் அர்த்தம்...
உரியவர்கள் இதைப் பார்த்து மாற்றத்தைக் கொண்டு வந்தால் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களும் அகமகிழ்வார்கள்.. செய்வார்களா.. அவர்கள் செய்வார்களா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}