அண்ணன் துரைமுருகன் பாவம்.. மரியாதை தர வேண்டும்.. மூத்த தலைவர்களுக்கு பரிந்து பேசிய தமிழிசை!

Aug 26, 2024,05:40 PM IST

சென்னை: அண்ணன் துரை முருகன் பாவம் என்று முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். அதேபோல தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று எடப்பாடியை விமர்சித்த அண்ணாமலைக்கும் பதில் தெரிவித்துள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.


சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ஒரு வகுப்பில் புதிய மாணவர்கள் வந்தால் சமாளித்து விடலாம்.பழைய மாணவர்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம். பாஸ் ஆகி ரேங்க் வாங்கிக்கொண்டும் போக மாட்டேன் என்று கூறிக்கொண்டு வகுப்பில் இருக்கிறார்கள் ஓல்டு ஸ்டூடன்ட்ஸ் அவர்களை சமாளிப்பது கடினம், குறிப்பாக துரைமுருகன் இருக்கிறார். 


அவர் கலைஞர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஒரு விஷயம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அவரிடம் கூறி எப்படி இருக்கிறது என்று கேட்டால் சந்தோஷம் என்று ஒரே வார்த்தையில் முடிந்துவிடுவார். நன்றாக இருக்கிறது என்று சொல்கிறாரா அல்லது நன்றாக இல்லை என்று சொல்கிறாரா என்பது யாருக்கும் புரியாது. இந்த சூழலில் சிறப்பாக வேலை பார்த்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆஃப் எனப் பேசியிருந்தார் ரஜினி. 




இதுதொடர்பாக துரைமுருகன் காட்டமான பதிலைக் கொடுக்கவே திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்தது. பின்னர் இவரும், ரஜினிகாந்த்தும் நாங்கள் நண்பர்கள் என்று மாறி மாறி சொல்லி சமரசமாகி விட்டனர். இந்நிலையில், தமிழிசை சௌந்தர்ராஜன் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  திமுக எனும் ஆலமரத்தை சாய்க்க முடியாது என்று ரஜினி தெரிவித்திருக்கிறார். தெலுங்கானாவில், ஆந்திராவில் இருந்த பெரும் ஆல மரங்கள் சாய்ந்திருக்கின்றன. அரசியலில் அசைக்க முடியாத ஆலமரம் என்பதெல்லாம் இல்லை.


ரஜினி திமுகவில் ஒரு புயலை உருவாக்கி இருக்கிறார். சுனாமியே உருவாக்கி இருக்கிறார் என்று சொல்லலாம். பாவம் அண்ணன் துரைமுருகன். கட்சிக்காக கடுமையாக உழைத்த துரைமுருகனை ஸ்டாலினுக்கு கீழ்ப்படிந்து இருக்கச் சொல்வார்கள், அடுத்து உதயநிதிக்கு கீழ்ப்படிய சொல்வார்கள். 


அதனால் தான் பாஜக வாரிசு அரசியலை எதிர்க்கிறது. திமுகவில் ஒரு குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இது தவறு. எனவே திமுக தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும். பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது என்பதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறேன். பாஜகவில் மூத்தவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என சூசகமாக துரை முருகனுக்கு தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்.


அதேபோல எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை விமர்சித்ததற்கு பதில் அளித்த தமிழிசை செளந்தரராஜன், பொது மேடையில் பேசுவதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசியது அவரது பாணி. ஆனால் என்னைப் பொறுத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்